சென்னை மாவட்டத்தில் ஏப்ரல் 4 ஆம் தேதி மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் உள்ள சென்னை மாவட்டத்தில் இருக்கும் துணை மின் நிலையங்களில் வருகின்ற ஏப்ரல் 4ஆம் தேதி பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்படும் என மின்வாரியம் சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது.
மின்தடை:
தமிழகத்தில் உள்ள துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒவ்வொரு மாதமும் மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் மின்வாரியத்தின் அறிவிப்பின் பெயரில் மின் விநியோகம் தடை செய்யப்படும். மேலும் மின் வாரியத்தின் அறிவிப்பை கருத்தில் கொண்டு பொது மக்களும் முன்னரே தங்களது அன்றாட வேலைகளை செய்து முடித்து விடுவார். இந்நிலையில் தற்போது தமிழகத்தின் தலைநகரான சென்னையில் உள்ள முக்கிய இடங்களில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்தடை ஏற்பட இருப்பதாக மின் வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் 36 மணி நேர முழு ஊரடங்கு அமல் – அரசு அதிரடி உத்தரவு!
தமிழகத்தின் தலைநகர் சென்னையில் வருகின்ற ஏப்ரல் 4ஆம் தேதி மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள், போரூர் – திருமுடிவாக்கம் பகுதியில் உள்ள குன்றத்தூர் பகுதி, திருமுடிவாக்கம் தொழிற்பேட்டை, சோமங்கலம், பூந்தண்டலம், பெரியார் நகர், குன்றத்தூர் பஜார், வழுதலம்பேடு ஆகிய இடங்களை சுற்றியுள்ள பகுதிகளிலும், டைடல் பார்க், எழில் நகர் பகுதியில் உள்ள துரைப்பாக்கம், கண்ணகி நகர், எழில் நகர் பெருங்குடி பெருந்தலைவர் காமராஜர் நகர் பிரதான சாலை 1,2,3வது குறுக்கு தெரு, ராம் ராகவி அப்பார்ட்மென்ட்ஸ். அதனை தொடர்ந்து, ஆவடி பகுதியில் உள்ள அலமாதி பங்காரம் பேட்டை கிராமம், வீரபுரம் கிராமம், பாரதி நகர், வேல்டெக் ஜங்ஷன் காமராஜர் நகர் ஸ்ரீனிவாசா நகர், கோவர்த்தனகிரி, அரவிந்த நகர், வசந்தம் நகர், சந்திரா சிட்டி ஆகிய இடங்களில் மின்தடை ஏற்பட இருப்பதாக தெரிவித்து உள்ளனர்.
இது தவிர, கிண்டி பகுதியில் உள்ள செயின்ட் தாமஸ் மவுண்ட் மரியபுரம் , துலசிங்கபுரம், கலைஞர் நகர் ஆலந்தூர் சிமெண்ட் ரோடு, பிச்சன் தெரு, திருவள்ளுவர் தெரு மூவரசம்பேட்டை யோகேஸ்வரன் தெரு, எம்.ஜி.ஆர் தெரு, மேடவாக்கம் பிரதான சாலை, பாலாஜி நகர் நங்கநல்லூர் விஸ்வநாதபுரம், கல்லூரி சாலை, கோவிந்தசாமி சாலை ராஜ்பவன் ரேஸ் கோர்ஸ் சாலை, நரசிங்கபுரம், பிள்ளையார் கோவில் தெரு அடுத்தாக, தாம்பரம் பகுதியில் உள்ள சிட்லப்பாக்கம் ராமகிருஷ்ணபுரம், வேளச்சேரி பிரதான சாலை, ஆர்த்தி நகர், 100 அடி சாலை, கலைவாணர் பூங்கா, கல்யாண சுந்தரம் தெரு கிழக்கு தாம்பரம் சுதானந்தா பாரதி தெரு, மோதிலால் நகர், இலட்சுமி நகர், எம்.இ.எஸ் சாலை, செம்பியம் பகுதியில் உள்ள முத்தமிழ் நகர் 1,6வது மற்றும் 8வது பிளாக் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை ஏற்பட இருப்பதாக தெரிவித்து உள்ளனர்.