தமிழகத்தில் மார்ச் 1ம் தேதி மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் சேலம் மாவட்டத்தில் உள்ள நெத்திமேடு, அன்னதானப்பட்டி பகுதியில் உள்ள துணை மின் நிலையத்தில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாளை (மார்ச் 1) மின்தடை ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்தடை அறிவிப்பு:
தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் உயர் மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடக்கும் போது எல்லாம் அந்தந்த மாவட்டங்களில் மின்தடை செய்யப்படும். மேலும் மின்தடை செய்யப்படும் முன்னரே அந்தந்த மாவட்ட மக்களுக்கு அறிவிப்பு வழங்கப்பட்டுவிடும். இந்த நிலையில் தற்போது சேலம் மாவட்டத்தில் உள்ள நெத்திமேடு, அன்னதானப்பட்டி பகுதியில் உள்ள துணை மின் நிலையத்தில் மின் பராமரிப்பு பணிகள் நடக்க உள்ளது.
தமிழ்நாட்டில் மின்சாரம் இடைவிடாமல் கிடைக்க வேண்டும் என்றால் மின் ஊழியர்கள் மூலமாக மாதந்தோறும் தொடர்ந்து இரண்டு மற்றும் மூன்று நாட்கள் மாவட்டத்தில் உள்ள மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் செய்யப்படும். இதன் காரணமாக மின்தடை செய்யப்படுவது வழக்கம்.
மத்திய அரசு ஊழியர்கள் கவனத்திற்கு – அகவிலைப்படி (DA) நிலுவைத்தொகை எப்போது?
நாளை சேலம் மாவட்டத்தில் மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள், நெத்திமேடு , அன்னதானப்பட்டி, செவ்வாய்பேட்டை, சத்திரம், அரிசிப்பாளையம், நான்கு சாலை, குகை, லைன்மேடு, தாதகாபட்டி, தசாநாயக்கன்பட்டி, கொண்டலாம்பட்டி, நெய்க்காரப்பட்டி, உத்தமசோழபுரம், பூலாவாரி, சூரமங்கலம், மெய்யனுர், சின்னேரிவயல், பள்ளப்பட்டி, சாமிநாதபுரம் ஆகிய பகுதியில் மின்தடை ஏற்பட உள்ளது. மேலும் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும் என்றும் சேலம் இயக்க கோட்ட செயற்பொறியாளர் புஷ்பம் தெரிவித்து உள்ளார்.