தமிழகத்தில் இன்னும் 3 நாட்களில் மின்தடை பிரச்சனை நீங்கும் – மின்வாரியம் உறுதி!
தமிழகத்தில் அடிக்கடி மின்தடை ஏற்படுவதை தவிர்க்கும் வகையில் தற்போது பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த பணிகள் வருகிற ஜூன் 28ம் தேதிக்குள் முழுமையாக முடிவு பெறும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மின்வாரியம்:
தமிழகத்தில் கடந்த ஆட்சி காலத்தில் சுமார் 10 மாதங்களாக மின் துறை சார்பில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளவில்லை. இதன் விளைவாக தமிழகத்தில் தற்போது அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வருகிறது. இதனால் மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இதனை தொடர்ந்து தமிழகத்தில் ஏற்படும் மின்தடையை தவிர்க்கும் வகையில் மாநிலம் முழுவதும் தொடர்ந்து 10 நாட்கள் மின்துறை சார்பில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
தமிழகத்தில் புதிதாக மின் இணைப்பு பெற விண்ணப்பம் செய்தோர் கவனத்திற்கு!
அதன்படி தற்போது மாநிலம் முழுவதும் மின்துறை பணியாளர்கள் மிக தீவிரமாக பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி சேலம் மாநகர் முழுவதும் புதிய மின்கம்பங்கள் மாற்றம், மின் கம்பங்களில் பீங்கான் இன்சுலேட்டருக்கு பதில் பைப்பர் பொருளால் உருவாக்கப்பட்ட இன்சுலேட்டர் மாற்றம் போன்ற பணிகள் நடைபெற்று வருகிறது. சேலம் மாவட்டத்தில் உள்ள 6 மண்டலங்களில் சுமார் 100க்கும் மேற்பட்ட டிவிசன்கள் உள்ளன. அங்கு முழுவதும் தற்போது மிக தீவிரமாக பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
மாதந்தோறும் ரூ.14 ஆயிரம் பெறும் பென்ஷன் பாலிசி – LIC புதிய திட்டம்!
தற்போது நடந்து வரும் பராமரிப்பு பணிகளை மின்சார வாரியம் கண்காணிப்பு பொறியாளர் சண்முகம் அவர்கள் நேரில் ஆய்வு மேற்கொண்டார். இந்நிலையில் தற்போது மின்துறை அதிகாரிகள் கூறியதாவது, இந்த பராமரிப்பு பணிகள் விரைந்து செயல்படுத்தப்பட்டு வரும் 28ம் தேதிக்குள் பெரும்பாலுமான பராமரிப்பு பணிகள் முழுமையாக நிறைவு செய்யப்படும் என்று தெரிவித்துள்ளனர். இதனால் இன்னும் 3 நாட்களுக்கு பின் தமிழகத்தில் மின்தடை ஏற்படாது என்று கூறப்படுகிறது.