அலர்ட் மக்களே.. நாளை (அக்.11) இந்த ஏரியால Power off – வேலையெல்லாம் இப்போவே முடிச்சிருங்க!
திருவாரூர் மாவட்டம் அடியக்கமங்கலத்தில் உள்ள துணை மின் நிலையத்தில் நாளை (11.10.2022) மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் அத்துணை மின் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் மின்தடை செய்யப்படும் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது.
மின்தடை:
தமிழகத்தில் மின் பயனர்களுக்கு தடையில்லா மின்சாரத்தை வழங்கும் நோக்கில் மின்வாரியம், மாதந்தோறும் துணை மின் நிலையங்களில் மின் பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த பராமரிப்பு பணிகளின் போது சேதமடைந்த மின் கம்பங்களை மாற்றுதல் வயர்களை சரி செய்தல் மற்றும் மின்விநியோக பாதைகளுக்கு இடையூறாக உள்ள உயர்ந்த மரங்கள் மற்றும் மின் கம்பிகளுக்கு இடையே உள்ள மரங்கள் வெட்டப்பட்டு வருகிறது. இப்பணிகள் காரணமாக குறிப்பிட்ட நேரம் மின் விநியோகம் தடை செய்யப்பட்டு வருகிறது.
இது குறித்து அந்தந்த பகுதியில் மின் வாரிய செயற்பொறியாளர்கள் மின் பயனர்களுக்கு அறிவிப்பு விடுக்கின்றனர். அந்த வகையில் தற்போது திருவாரூர் மாவட்டத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. திருவாரூர் மாவட்டம் அடியக்கமங்கலம் துணை மின் நிலையத்தில் நாளை (அக்.11) மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அதனால் கீழ்காணும் பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும் என்று மின்வாரியம் தகவல் தெரிவித்துள்ளது.
வாட்ஸ் அப் பயனரா நீங்கள்? உங்களை உளவு பார்க்கும் போலி செயலிகள் – அதிர்ச்சி ரிப்போர்ட்!
Exams Daily Mobile App Download
அதன்படி திருவாரூர் நகர், தெற்கு வீதி, ஆந்தக்குடி, திருப்பயத்தாங்குடி, விஜயபுரம், பனகல் சாலை, தஞ்சை சாலை, தப்பளாம்புலியூர், மாவூா், இபி காலனி, விளமல், கொடிக்கால்பாளையம், முகுந்தனூா், மாங்குடி, கூடூர், திருப்பயத்தாங்குடி, ஆகிய பகுதிகளிலும், அடியக்கமங்கலம், சிதம்பர நகா், பிலாவடி மூலை, அலிவலம், புலிவலம், புதுப்பத்தூர், நீலப்பாடி, கீழ்வேளூர், கொரடாச்சேரி ஆகிய பகுதிகளிலும் நாளை மின்தடை ஏற்படும்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்