கவனம் மக்களே.. தமிழகத்தில் நாளை மறுநாள் (அக்.3 ) Power Off – உங்க ஏரியாவும் இந்த லிஸ்ட்ல இருக்கா?
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள எட்டயபுரம் துணை மின் நிலையத்தில் நாளை மறுநாள் (அக்.03) மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அதனால் சில பகுதிகளில் மின்தடை செய்யப்படும் என்று அப்பகுதி மின்வாரிய செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
மின்தடை:
தமிழகத்தில் 8 ஆண்டுகளுக்கு பிறகு நடப்பு ஆண்டில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த மின் கட்டண உயர்வுக்கு மக்கள் எதிர்ப்புகளை தெரிவித்து வந்தனர். இதற்கு மத்தியிலும் கடந்த மாதம் உயர்த்தப்பட்ட புதிய மின் கட்டணம் அமலுக்கு வந்தது. இருப்பினும் அனைத்து வீட்டு மின் நுகர்வோர்களுக்கும் ஏற்கனவே வழங்கப்பட்டு வரும் 100 யூனிட் வரை விலையில்லா மின்சாரம் வழங்கப்படும். அதே போல குடிசை விவசாயம், கைத்தறி, விசைத்தறி தொழிலாளர்களுக்கு மானிய விலை மின்சாரம் தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மின் விபத்துகளை தவிர்க்கும் நோக்கிலும், பாதுகாப்பான தடையில்லா மின்சாரத்தை வழங்கவும் மாதந்தோறும் துணை மின் நிலையங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. பராமரிப்பு பணிகளின் போது சேதமடைந்த மின்கம்பங்கள் மாற்றப்படுகிறது. மேலும் உறுதியான வயர்கள், மின் கம்பிகள் பொருத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் அக்டோபர் 03-ம் தேதி தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது.
அரசு போட்டித்தேர்வுக்கு படித்து கொண்டிருப்பவர்களா நீங்கள்? உங்களுக்கான நாளைய இலவச மாதிரி தேர்வு!!
Exams Daily Mobile App Download
அத்துணை மின் நிலையத்தில் புதிய விவசாய மின் இணைப்பு வழங்குவதற்கு மேல ஈரால் உயரழுத்த மின் பாதை அமைக்கும் பணிகள் நடைபெறவுள்ளது . அதனை தொடர்ந்து எப்போதும் வென்றான் துணை மின் நிலையத்திலும் மின் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. அதனால் வாலம்பட்டி ,ஆத்தி கிணறு, மேல ஈரால், டி.சண்முகபுரம் ஆகிய பகுதிகளிலும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும் என்று மின்வாரியம் தெரிவித்துள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்