தமிழகத்தின் ‘இந்த’ பகுதிகளுக்கு நாளை மறுநாள் (ஆக.18) மின்தடை – வாரியம் தகவல்!

0
தமிழகத்தின் 'இந்த' பகுதிகளுக்கு நாளை மறுநாள் (ஆக.18) மின்தடை - வாரியம் தகவல்!
தமிழகத்தின் 'இந்த' பகுதிகளுக்கு நாளை மறுநாள் (ஆக.18) மின்தடை - வாரியம் தகவல்!
தமிழகத்தின் ‘இந்த’ பகுதிகளுக்கு நாளை மறுநாள் (ஆக.18) மின்தடை – வாரியம் தகவல்!

திண்டுக்கல் மாவட்டத்தின் பாளையம், வள்ளிபட்டி பகுதி துணை மின் நிலையத்தில் நாளை (ஆகஸ்ட் 17) மற்றும் நாளை மறுநாள் (ஆகஸ்ட் 18) மாதாந்திர பணி நடைபெற உள்ள காரணத்தால் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கு மின் விநியோகம் தடை செய்யப்படும் என மின்வாரிய செயற்பொறியாளர் பிச்சை தகவல் தெரிவித்துள்ளார்.

மின்தடை :

தமிழகத்தில் மாதம் ஒருமுறை அந்தந்த மாவட்டங்களில் உள்ள துணை மின் நிலையத்தில் மின் கம்பங்கள் மற்றும் மின்மாற்றிகளில் உள்ள பழுதுகளை சரி செய்யும் பணியும், அதன் மீது படர்ந்திருக்கும் செடி, கொடிகளை அகற்றும் பணியும் மின் வாரியம் சார்பில் மேற்கொள்ளப்படும். ஏனெனில் மின் கம்பங்களில் இருந்து சீரான மின் விநியோகம் அனைத்து பகுதிகளுக்கும் கிடைக்க வேண்டும் என்பதற்காக இப்பணிகள் மின்வாரிய ஊழியர்களை கொண்டு மேற்கொள்ளப்படுகிறது.

தமிழகத்தில் மீண்டும் டெங்கு பரவலா? சுகாதாரத்துறை எச்சரிக்கை!

இந்த பராமரிப்பு பணிகள் நடைபெறும் போது அந்தந்த துணை மின் நிலையங்களை சுற்றியுள்ள பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்படும். மேலும், மின் தடை ஏற்பட உள்ள பகுதிகள் குறித்த அறிவிப்புகளும் முன்னரே சென்று விடும். அவ்விதமாக திண்டுக்கல் மாவட்டத்தில் பாளையம், வள்ளிபட்டி பகுதியில் நாளை (ஆகஸ்ட் 17) மற்றும் நாளை மறுநாள் (ஆகஸ்ட் 18) அன்று மின் பராமரிப்பு பணி மேற்கொள்ள உள்ளது. அதன் நிமித்தம் அங்கிருந்து மின்விநியோகம் பெறக்கூடிய பகுதிகளுக்கு மின்தடை ஏற்படும் எனவும், அந்த இடங்கள் குறித்த தகவல்களும் மின் வாரியம் சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளன.

Exams Daily Mobile App Download

மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள் :

பாளையம் துணை மின்நிலையத்தில் நாளை 17- ந் தேதி பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை பாளையம் வான்ராயன்பட்டி, ஆணைப்பட்டி, கூடலூர், குஜிலியம்பாறை, வடக்கு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது எனவும்,

அதே போல், வள்ளிப்பட்டி துணை மின்நிலையத்தில் நாளை மறுநாள் 18-ந் தேதி பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் அன்று காலை 9 மணிமுதல் மதியம் 2 மணி வரை அம்மாபட்டி, ராமகிரி, தலிப்பட்டி, மல்லப்புரம், உக்குவார்பட்டி, வாணிக்கரை, கூம்பூர், வள்ளிப்பட்டி, அழகாபுரி, சத்திரப்பட்டி, சேர்வைக்காரன்பட்டி, கரிக்காலி, பல்லாநத்தம், தாதா நாயக்கனூர், இடையபட்டி, பூசாரிபட்டி உள்ளிட்ட கிராமங்களில் மின் விநியோகம் இருக்காது என்று உதவி செயற்பொறியாளர் பிச்சை தெரிவித்துள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!