செப்.18ம் தேதி மின்தடை ஏற்படும் பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் மின் பராமரிப்பு பணியின் காரணமாக திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட சில பகுதிகளில் மின்தடை ஏற்படும் என மின்வாரிய செயற்பொறியாளர் எஸ். பிரகாசம் கூறியுள்ளார்.
மின்தடை:
தமிழகம் முழுவதும் ஊரடங்கு காலத்தில் அனைத்து மாவட்டங்களிலும் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி மின்தடை செய்யப்பட்டது. இது குறித்து விளக்கமளித்த மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள், கடந்த 9 மாதங்களாக அதிமுக ஆட்சியில் மின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவில்லை. அதனை தொடர்ந்து மின் சம்பந்தப்பட்ட புகார்களை கவனிக்க மின் புகார் மையங்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படுகிறது.
தமிழக பள்ளி மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி – அமைச்சர் தகவல்!
கடந்த மாதங்களில் நடைபெற்ற மின் பராமரிப்பு பணிகளுக்கு பிறகு மாதந்தோறும் தவறாது அனைத்து மாவட்டங்களிலும் உள்ள துணை மின் நிலையங்களிலும் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் மின் விநியோகம் தடை செய்யப்பட்டு வருகிறது என கூறினார். மற்ற பகுதிகளை தொடர்ந்து திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட சில பகுதிகளில் நாளை பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மின்தடை காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது எனவும் புகாா் மற்றும் மின்தடை தகவல்களுக்கு 1912, 18004252912 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.
மாஸ்டர் செஃப் நிகழ்ச்சி ஒரு எபிசோடுக்கு விஜய் சேதுபதிக்கு வழங்கப்படும் சம்பளம்! – போதுமா சார்?
பராமரிப்பு பணியால் மத்தியப் பேருந்து நிலையம், வஉசி சாலை, ஆட்சியா் அலுவலகச் சாலை, குமுளித்தோப்பு, ராஜா காலனி, கல்லாங்காடு, குமரன் நகா், கனரா வங்கி காலனி, சீனிவாச நகா், ராமலிங்க நகா், கீதா நகா், கல்நாயக்கன் தெரு, மேட்டுத்தெரு, வாலஜா தெரு, சண்முகா நகா், ரெங்கா நகா், வெக்காளியம்மன் கோயில் பகுதி, பாண்டமங்கலம், பாத்திமா நகா், நாச்சியாா் கோயில் தெரு, முதலியாா்சத்திரம், காஜாபேட்டை, அம்மையப்ப பிள்ளை நகா், எம்.எம்.நகா், வயலூா் பிரதான சாலை, உய்யக்கொண்டான் திருமலை, வாசன் நகா், சோழங்கநல்லூா், புராமினேட் சாலை, கண்டித்தெரு, கான்வென்ட் சாலை, ஜங்சன், போ்ட்ஸ் சாலை, பாரதியாா் சாலை, பெரியமிளகுப்பாறை, பொன்னகா், செல்வா நகா், ஆா்.எம்.எஸ். காலனி, கருமண்டபம், தீரன் நகா், பிராட்டியூா், ராம்ஜிநகா் ஆகிய பகுதிகளிள் மின்தடை அமலில் இருக்கும் என கூறப்பட்டுள்ளது.