தமிழகத்தில் நாளைய (செப்.27) மின்தடை பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் நாளை (செப்.27) மின்தடை செய்யப்படவுள்ள பகுதிகளை தமிழ்நாடு மின்வாரியம் தற்போது வெளியிட்டு உள்ளது.
தமிழகத்தில் மின்தடை பகுதிகள்:
தமிழகத்தின் ஒவ்வொரு மின்வட்டங்களாக மாதந்தோறும் பராமரிப்பு பணிகள், மரக்கிளைகளை அகற்றும் பணிகள் போன்றவற்றை மேற்கொண்டு வருகிறது.இதனால் ஒவ்வொரு நாலும் குறிப்பிட்ட மின் வட்டத்திற்கு உட்பட பகுதிகளில் மின்தடைசெய்யப்படுகிறது. அதன்படி, தற்போது மேலமடை பகுதிக்கு உட்பட்ட கோமதிபுரம் பகுதிகளில் மின்வழித்தடத்தில் உள்ள மரக்கிளைகளை அகற்ற ( செப்.27) அப்பகுதிகளில் மின்தடை செய்யப்படவுள்ளது.
தமிழக கல்லுரியில் ஆசிரியரல்லாத காலிப்பணியிடங்கள் – அக்.12 வரை விண்ணப்பங்கள் வரவேற்பு
பாண்டிகோவில், கண்மாய்ப்பட்டி, கோமதிபுரம் 1 முதல் 7வது தெருக்கள், மேலமடை, வீடு வசதிக் குடியிருப்பு பகுதிகள்,முகவை தெரு, மருதுபாண்டியர் தெரு மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை செய்யப்படவுள்ளது. அவற்றோடு அச்சம்பத்து துணை மின்நிலைய பணிகளில் நாளை மின்தடை செய்யப்படவுள்ளது.
தமிழகத்தில் செப்.28 வரை இம்மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்க்கும் – வானிலை அறிக்கை!
நாகமலை புதுக்கோட்டை, என்ஜிஜிஓ காலனி, அச்சம்பத்து, வடிவேல்கரை, கீழக்குயில்குடி, மேலக்குயில்குடி, ராஜம்பாடி, வடபழஞ்சி, தட்டனூர், கரடிப்பட்டி, ஆலம்பட்டி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில், மின்தடை ஏற்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேற்கூறப்பட்டுள்ள பகுதிகளில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படவுள்ளது.