தமிழகத்தில் நாளை மறுநாள் (அக்.1) மின்தடை அறிவிப்பு – எந்த ஏரியா தெரியுமா?
தமிழகத்தில் நாளை மறுநாள் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த சில குறிப்பிட்ட பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களுக்கான முன்னறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.
மின்தடை:
தமிழகம் முழுவதும் மாதம் தோறும் பகுதி வாரியாக தகுந்த முன்னறிவிப்போடு மின்தடை செய்யப்படுகிறது. மின்வாரியங்களின் மின் நிலையங்களில் உள்ள இயந்திரங்கள் மற்றும் பொருட்கள் அனைத்தும் முறையாக பராமரிக்கப்பட வேண்டியது அவசியம். அவ்வாறு முறையாக பராமரிக்கவில்லை என்றால் திடீரென பழுது ஏற்படும் அல்லது மின் விபத்து ஏற்படும் சூழல் ஏற்பட்டு விடும்.
இதனால் மிகப்பெரிய விபரீதங்களும் உயிரிழப்புகளும் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளது. இதனால் தான் தமிழக அரசு மாதந்தோறும் முறையாக பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, மின் வாரிய ஊழியர்கள் பராமரிப்பு பணிகளில் ஈடுபடுவதற்கு முன் முறையாக அனைத்து மின் சாதனங்களும் அணைக்கப்பட்டு விட்டதா என்பதை அதிகாரிகள் சோதனை செய்யவும் அரசு உத்தரவிட்டுள்ளது. அதையும் மீறி விபத்துகள் ஏற்படும் பட்சத்தில் உயர் அதிகாரிகள் தான் விபத்திற்கு பொறுப்பேற்க வேண்டும் என்று அரசு தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் குறைக்கப்பட ஆம்னி பேருந்து டிக்கெட் விலை – மகிழ்ச்சியில் பயணிகள்!
Exams Daily Mobile App Download
இந்நிலையில், அக்டோபர் 1ம் தேதியான நாளை மறுநாள் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டி மின்பாதையில் பராமரிப்பு பணிகள் நடக்க உள்ளது. இதனால் குத்தாம்பூண்டி ரோடு, பாரதி நகர், பழைய போலீஸ் நிலையம் தெரு, விக்கிரவாண்டி மெயின் ரோடு, ரெட்டிகுப்பம் ரோடு, மேட்டு தெரு ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்