தமிழகத்தில் நாளை (செப்.17) இந்த பகுதிகளில் Power Cut – முழு விவரம் இதோ!
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் மற்றும் திருத்தங்கல் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அதனால் குறிப்பிட்ட நேரம் வரை மின் விநியோகம் தடை செய்யப்படும் என்று அப்பகுதி மின்வாரிய செயற்பொறியாளர் தகவல் தெரிவித்துள்ளார்.
மின்தடை:
தமிழகத்தில் கடந்த வாரம் மின் கட்டணம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தற்போது தமிழக மின் வாரியம் உள்ள நிலைமையில் மின் கட்டண உயர்வு தவிர்க்க முடியாதது என்று விளக்கம் அளித்துள்ளது. இந்த மின் கட்டணம் உயர்த்தப்பட்டாலும் 100 யூனிட் வரை கட்டணம் எப்போது போல இலவசமாக வழங்கப்படும். அத்துடன் கைத்தறி உள்ளிட்ட தொழில்களில் ஈடுபட்டோர்களுக்கு மானிய விலை மின் விநியோகம் தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஒவ்வொரு பகுதியிலும் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
இந்த பராமரிப்பு பணிகளின் போது சேதமடைந்த மின் கம்பங்களை மாற்றுதல், வயர்களை சரி செய்தல் போன்ற பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் பழுதடைந்த மின் கம்பிகளை மாற்றுதல், மின் இணைப்புகளும் சரி செய்யப்பட்டு வருகிறது. இத்தகைய பணிகள் நடைபெறும் போது மின் ஊழியர்கள் பாதுகாப்பிற்காக மின்தடை செய்யப்படுவது வழக்கம். அதன்படி நாளை விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சாத்தூர் மற்றும் திருத்தங்கல் துணை மின் நிலையங்களில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
தமிழகத்தில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் வெற்றிகரமாக தொடக்கம் – முதல்வர் பெருமிதம்!
Exams Daily Mobile App Download
அதனால் சாத்தூர் நகர், படந்தால், மேட்டமலை, திருத்தங்கல் நகர், செங்கமல நாச்சியார்புரம், சடையம்பட்டி, ஓ. மேட்டுப்பட்டி, அமீா்பாளையம், வெங்கடாசலபுரம், ஒத்தையால், பெரியகொல்லப்பட்டி, பூவநாதபுரம், தேவர்குளம், சின்னகொல்லப்பட்டி, ஸ்டேட் பேங்க் காலனி, சாரதா நகா் மற்றும் அதனைச்சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும் என்று மின்வாரியம் தகவல் தெரிவித்துள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்