அலர்ட் மக்களே.. தமிழகத்தில் நாளை (செப்.28) இந்த இடங்களில் “Power cut”!
தேனி மாவட்டத்தில் உள்ள வட வீர நாயக்கன்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (28.09.2022) மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், அத்துணை நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் மின்தடை செய்யப்படும் என்று மின்வாரியம் தகவல் தெரிவித்துள்ளது. தற்போது மின் தடை செய்யப்படவுள்ள பகுதிகள் குறித்து இப்பதிவில் காண்போம்.
மின்தடை:
தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து துணை மின் நிலையங்களிலும் மாதாந்திர மின்வாரிய பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு மின்வாரியம் முன்னதாக மின்தடை செய்ய இருக்கும் பகுதிகளின் பட்டியலை அறிவித்துவிடும். இந்நிலையில் நாளை (28-09-2022) தேனி மாவட்டம் வீர நாயக்கன்பட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.
அதனால் அத்துணை நிலையத்திற்குட்பட்ட தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம், பென்னிகுவிக் நினைவு நகராட்சி பேருந்து நிலையம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம், சிட்கோ தொழிற்பேட்டை வளாகம், சிவாஜி நகர், வடபுதுப்பட்டி, அரசு பல்துறை பெருந்திட்ட வளாகம், தேனி கர்னல், அரபடி தேவன் பட்டி, பாரஸ்ட் சாலை ஆகிய பகுதிகளில் நாளை காலை 10 மணி முதல் பிற்பகல் 4 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும் என்று மின்வாரியம் தகவல் தெரிவித்துள்ளது.
தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் மருத்துவமனையில் அனுமதி – வெளியான தகவல்!
Exams Daily Mobile App Download
அதனை தொடர்ந்து சின்னக்காம்பட்டி, ஓடைப்பட்டி, மார்க்கம்பட்டி, இடையகோட்டை, கொ.கீரனூர், மாம்பாறை, குத்திலுப்பை, நரசிங்காபுரம், கொங்கபட்டி, ஜவ்வாதுபட்டி,அண்ணாநகா்,, நவக்கானி, புல்லாக்கவுண்டனூா், இ. கல்லுப்பட்டி சோழியப் கவுண்டனூர், இ. அய்யம்பாளையம், நாரப்பநாயக்கன்பட்டி, எல்லப்பட்டி, பாறைப்பட்டி, இடையன்வலசு, பெருமாள்கவுண்டன் வலசு, குளிப்பட்டி, கக்கரநாயக்கனூா், வலையபட்டி, அத்தப்பன்பட்டி, ஜ. வாடிப்பட்டி, சாமியார் புதூர், நாகப்பன் பட்டி, ஜோகிப்பட்டி, கோமாளிப்பட்டி ஆகிய பகுதிகளில் நாளை (செப்.28) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்