தமிழகத்தில் நாளை (செப். 23) இந்த பகுதியில் பவர் கட் – முழு விவரம் இதோ!
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் எஸ்.பி.பி. காலனி,முசிறி பகுதி துணை மின் நிலையங்களில் செப்டம்பர் 23ம் தேதி மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் மின் விநியோகம் தடை செய்யப்படும் என்று மின்வாரியம் தெரிவித்துள்ளது.
மின்தடை :
தமிழகத்தில் சீரான மின் விநியோகத்திற்காக மாதந்தோறும் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள துணை மின் நிலையங்களில் தவறாது பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த மின் பராமரிப்பு பணிகளின் போது மின் விநியோக பாதைகளுக்கு இடையூறாக உள்ளவைகளை கண்டறிந்து சரி செய்யப்படுகிறது. மேலும் மின் நுகர்வோர் பாதுகாப்பிற்காகவும் துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் முடிவடையும் வரை மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.
தமிழக மக்களை பயமுறுத்தும் “ப்ளூ காய்ச்சல்” – சுகாதாரத்துறை எடுத்துள்ள அதிரடி நடவடிக்கை!
அந்த வகையில் மற்ற மாவட்டங்களை தொடர்ந்து நாளை நாமக்கல் மாவட்டம் ஆர்.எஸ்., ஓடப்பள்ளி, பள்ளிபாளையம் எஸ்.பி.பி. காலனி பகுதி துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அதனால் பட்லூர்,வெள்ளிக்குட்டை, வெடியரசன், இறையமங்கலம், பாப்பம்பாளையம், காடச்சநல்லூர், பள்ளிபாளையம், கொக்கராயன்பேட்டை, தாஜ் நகர் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
அதனை தொடர்ந்து முசிறி துணை மின்நிலையத்திற்குட்பட்ட பகுதிகளான அத்தியம்பாளையம், நாய்க்கடிபுதூர், கொட்டாம்பட்டி, பல்புடுங்கி, அக்கலாம்பட்டி, குன்னங்கல், இளையாபுரம், குன்னங்கல் புதூர்,முசிறி, மாரப்பநாயக்கன்பட்டி,குப்பகவுண்டன்புதூர், புரசாபாளையம், சிலுவம்பட்டி ஆகிய பகுதிகளில் நாளை காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும் என்று மின்வாரியம் தகவல் தெரிவித்துள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்