தமிழகத்தில் ஆகஸ்ட் 26ம் தேதி ‘இந்த’ பகுதிகளில் மின்தடை – முக்கிய அறிவிப்பு வெளியீடு!
புதுக்கோட்டையில் ஆகஸ்ட் 26ம் தேதி மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் சில பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்படும் என்று மின்வாரியம் தெரிவித்துள்ளது.
மின்தடை:
தமிழகத்தில் சீரான மின் விநியோகத்திற்காக மாதந்தோறும் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள துணை மின் நிலையங்களில் தவறாது பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பராமரிப்பு பணிகளின் போது மின் ஊழியர்கள் பாதுகாப்பிற்காகவும், மின் நுகர்வோர் பாதுகாப்பிற்காகவும் துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் முடிவடையும் வரை மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது. மற்ற மாவட்டங்களை தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்ட துணை மின் நிலையத்தில் ஆகஸ்ட் 26ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
தமிழக பொறியியல் கல்லூரிகளில் நேரடி 2ம் ஆண்டு மாணவர் சேர்க்கை – கலந்தாய்வு குறித்த தகவல் இதோ!
அதனால் அன்றைய தினம் ஆதனக்கோட்டை, மின்னாத்தூர், கணபதிபுரம் பெருங்களூர், தொண்டைமான் ஊரணி, வாராப்பூர், அண்டகுளம், மணவிடுதி, சோத்துப்பாளை, சொக்கநாதர் பட்டி, மாந்தான்குடி, காட்டுநாவல், மட்டையன் பட்டி, மங்கலத்துப் பட்டி, கந்தர்வகோட்டை, அக்கச்சிப்பட்டி, வளவம்பட்டி,கல்லாக்கோட்டை, மட்டங்கால் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே போல வேம்பன் பட்டி, சிவன்தான்பட்டி, வீரடிபட்டி, புதுப்பட்டி, நம்புரான்பட்டி, மோகனூர், பகட்டுவான்பட்டி, பல்லவராயன்பட்டி, பழைய கந்தர்வகோட்டை, மங்கனூர், வடுகப்பட்டி, பிசானத்தூர், துருசுப்பட்டி, ஆத்தியடிபட்டி, கல்லாக்கோட்டை, வெள்ளாள விடுதி, சுந்தம் பட்டி ஆகிய பகுதிகளிலும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் ஆகஸ்ட் 26ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்