தமிழகத்தில் நாளை மறுநாள் (ஆக.20) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

0
தமிழகத்தில் நாளை மறுநாள் (ஆக.20) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் - மின்வாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் நாளை மறுநாள் (ஆக.20) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் - மின்வாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் நாளை மறுநாள் (ஆக.20) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

கோவை மாவட்டத்தில் சனிக்கிழமை (ஆகஸ்ட் 20) அன்று உப மின்நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கு மின் விநியோகம் தடை செய்யப்பட்டு மின்தடையாகும் என மின்வாரியம் சார்பில் தகவல் வெளியாகியுள்ளது.

மின்தடை

சில நாட்களாகவே தமிழகத்தில் அடிக்கடி பல்வேறு பகுதிகளில் மின்தடை செய்யப்பட்டு வருகிறது. இதற்கு மத்திய தொகுப்பில் இருந்து வரவேண்டிய மின் தட்டுப்பாடு தான் காரணம் என்றும் அதனை சரி செய்ய பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டும் எனவும் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் முன்னதாகவே ஒருமுறை தெரிவித்திருந்தார். அதனை தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள துணை மின் நிலையங்களில் இந்த பராமரிப்பு பணிகளை மேற்கொள்வது வழக்கமாகிவிட்டது.

தமிழக தாலுகா அலுவகத்தில் வேலை – 5 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

ஆனால் தற்போது பெய்து வரும் தொடர் மழை காரணமாகவும் பல இடங்களில் மின்தடை ஏற்படுகிறது. இருப்பினும் மாதாந்திர பணியானது தவறாமல் ஒவ்வொரு மாதமும் மேற்கொண்டு வருவதால் எந்தெந்த மாவட்டங்களில், பகுதிகளில் மின்தடை ஆகும் என்ற மொத்த விவரங்களையும் முன்னதாகவே மின்வாரியம் செய்திக்குறிப்பில் வெளியிட்டுவிடும். அவ்விதமாக கோவை மாவட்டத்தில் வருகிற 20-ந் தேதி (சனிக்கிழமை) பராமரிப்பு பணி காரணமாக சில இடங்களில் மின் தடை செய்யப்பட உள்ளது.

முத்துக்கவுண்டன் புதூர் துணை மின் நிலையம் :

பராமரிப்பு பணி நடைபெறுவதால் அங்கிருந்து மின் வினியோகம் பெறும் நீலாம்பூர், அண்ணா நகர், லட்சுமி நகர், குளத்தூர், முத்துக்கவுண்டன் புதூர் ரோடு, பைபாஸ் ரோடு ஒரு பகுதி, குரும்ப பாளையம் ஒரு பகுதி ஆகிய பகுதிகளுக்கு வருகிற (ஆக.20) அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் தடை செய்யப்படுகிறது.

உக்கடம் துணை மின் நிலையம்:

பராமரிப்பு பணி நடைபெறுவதால் அங்கிருந்து மின் வினியோகம் பெறும் வெரைட்டி ஹால் ரோடு பகுதி, டவுன்ஹால் பகுதி, தியாகி குமரன் மார்க்கெட், ஒப்பணக்கார வீதி, செல்வபுரம், கெம்பட்டி காலனி பகுதிகள், கரும்புக்கடை, ஆத்துப்பாலம், உக்கடம், சுங்கம் பைபாஸ் ரோடு, சண்முகா நகர், ஆல்வின் நகர், இந்திரா நகர், பாரி நகர் மற்றும் டாக்டர் முனிசாமி நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள், ஸ்டேட் பேங்க் ரோடு, கலெக்டர் அலுவலகம், ரெயில் நிலையம் பகுதிகள், அரசு மருத்துவமனை, லாரிப்பேட்டை, உக்கடம் பகுதிகளுக்கு 20ம் தேதி காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை செய்யப்பட உள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!