தமிழகத்தில் நாளை (அக்.1) பவர் கட் செய்யப்படும் பகுதிகள் – மக்களின் கவனத்திற்கு!!
தமிழக மின்சார துறையின் கீழ் இயங்கி வரும் துணை மின் நிலையங்களில் மாதந்தோறும் பராமரிப்பு பணிகள் காரணமாக குறிப்பிட்ட ஒரு நாள் மின்தடை ஏற்படும். அந்த வகையில் ராஜபாளையம் கோட்டத்தில் தொட்டியபட்டி துணை மின்நிலையத்தில் நாளை (அக் 1) மின்தடை ஏற்படும் பகுதிகளின் விவரங்கள் வெளியாகி இருக்கின்றன.
மின்தடை பகுதிகள்
தமிழகத்தில் மக்களின் அடிப்படை தேவைகளில் ஒன்றாக மின்சாரம் மாறிவிட்டது. ஒரு நாள் மின்சாரம் இல்லை என்றாலும் பல வேலைகள் தடைபட்டு விடும். அந்த அளவிற்கு முக்கியமான ஒன்றாக மின்சாரம் இருக்கிறது. இந்நிலையில் அரசு தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும் என்பதால் மாதந்தோறும் மின் கம்பங்கள், மின்மாற்றிகளில் உள்ள பழுது மற்றும் செடி கொடிகளை அகற்றும் பணி நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் அந்த துணை மின் நிலையங்களில் இருந்து மின்சாரம் விநியோகம் செய்யும் பகுதிகளில் மின்தடை ஏற்படும்.
மின்தடை ஏற்பட இருக்கும் பகுதிகளின் விவரங்களை மின்சார வாரியம் முன்கூட்டியே வெளியிட்டு வருகிறது. இந்நிலையில் நாளை அக். 1-ம் தேதி மின்தடை ஏற்பட இருக்கும் பகுதிகளின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில் நாளை (அக் 1) ராஜபாளையம் கோட்டத்தில் தொட்டியபட்டி துணை மின்நிலையத்தில் இருந்து மின் விநியோகம் செய்யப்படும் பகுதிகளில் மின்சார விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக கல்லூரிகளுக்கு 5 நாட்கள் விடுமுறை – வெளியான முக்கிய அறிவிப்பு!
Exams Daily Mobile App Download
அந்த வகையில் ராஜபாளையம் கோட்டத்தில் அமைந்துள்ள தொட்டியபட்டி உப மின் நிலையத்தில் மின்சாரம் செல்லும் தொட்டியபட்டி, புதுப்பட்டி, முத்துலிங்கபுரம், கோதை நாச்சியார் புரம், கொத்தங்குளம், அழகாபுரி, இ.எஸ்.ஐ. காலனி, வேட்டை பெருமாள் கோவில், கலங்கா பேரி, கலங்காபேரிபுதூர், ராஜீவ் காந்தி நகர், விஷ்ணு நகர், வேப்பங்குளம், மொட்ட மலை ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்படும் என மின் செயற்பொறியாளர் திருநாவுக்கரசு தெரிவித்துள்ளார்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்