தமிழகத்தில் நாளை (செப்.08) இந்த ஏரியாகளில் Power Cut – முழு தகவல் இதோ!
நாமக்கல் மாவட்டம் புதன்சந்தை துணை மின் நிலையத்தில் நாளை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் எந்தெந்த பகுதிகளில் மின்தடை ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்தடை அறிவிப்பு
இந்தியாவில் அதிகளவில் தொழில்கள் வளர்ச்சி அடைந்து வருகின்றன. இதன் காரணமாக புதிய தொழிற்சாலைகள், தனியார் நிறுவனங்கள் போன்றவைகள் அதிகரித்து வருகின்றன. இதனால் நாட்டில் அதிக அளவில் மின்சாரம் தேவைப்படுகிறது. மேலும் தொழில் துறை சார்ந்து அதிகமாக மின் உபயோகம் செய்யப்படுவதால் மின் பற்றாக்குறை நிலவி வருகிறது. இந்த நிலையில் நாட்டில் மின் உற்பத்தியும் கடந்த சில நாட்களாக குறைந்து வருவதாக தகவல்கள் வெளியாகின்றன.
தமிழக பள்ளி மாணவர்களுக்கு ரூ.1500 – விண்ணப்பிக்க இறுதி நாள் அறிவிப்பு!
இதன் காரணமாக அடிக்கடி மின்தடை ஏற்படும் நிலை நிலவி வருகிறது. இந்த நிலையில் இதனை சீர்படுத்தும் விதமாக அரசு சில புதிய மின் ஒப்பந்தங்களை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் நாட்டில் மின்சாரம் தேவை அதிகரிப்பை பூர்த்தி செய்யும் விதமாக ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன. இதனை தவிர மின் விநியோகம் சீராக வழங்கும் பொருட்டு மாவட்ட வாரியாக உள்ள துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் நாமக்கல் மாவட்டம் புதன்சந்தை துணை மின் நிலையத்தில் நாளை(வியாழக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் செல்லப்பம்பட்டி, மின்னாம்பள்ளி, புதன்சந்தை, கொளத்துப்பாளையம், ஏழூர், தத்தாத்திரிபுரம், கல்யாணி, நாட்டாமங்கலம், அம்மாபாளையம், கொழிஞ்சிப்பட்டி, புதுச்சத்திரம், பாச்சல், பிடாரிப்பட்டி, மூணுசாவடி, களங்கானி, காரைக்குறிச்சி பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து பரமத்திவேலூர், தாலுகா, சோழசிராமணி, சுள்ளிபாளையம், சத்திபாளையம், சின்னாம்பாளையம், ஜமீன் இளம்பள்ளி, சித்தம்பூண்டி, மாரப்பம்பாளையம், இ.நல்லகவுண்டம்பாளையம், பி.ஜி.வலசு ஆகிய பகுதிகளில் நாளை(செப்.8) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் ஏற்படும் என்று மின்வாரிய செயற்பொறியாளர் ராணி, நாகராஜன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்
கடந்த ஒரு வாரமாக
கடந்த ஓருவாரமாக மயிலாப்பூர் சாய்பாபா கோவில் சுற்றி உள்ள பகுதிகளில் அறிவிக்க படாத மின்வெட்டு அடுக்கு மாடி வீடுகளில்அதிகாலையில் தண்ணிர்பம்ப் போடமுடியவில்லைவாழ்க மின்வாரியத்தின் சேவை