தமிழகத்தில் செப். 13ம் தேதி மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள் – அறிவிப்பு வெளியீடு!
மயிலாடுதுறை மாவட்டம் நீடூர், பெரம்பூர், கடலங்குடி பகுதி துணை மின் நிலையத்தில் செப்டம்பர் 13ம் தேதி மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் மின் விநியோகம் தடை செய்யப்படும் என்று மின்வாரியம் தெரிவித்துள்ளது.
மின்தடை அறிவிப்பு
தமிழகத்தில் சீரான மின் விநியோகத்திற்காக மாதந்தோறும் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள துணை மின் நிலையங்களில் தவறாது பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த மின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதன் மூலம் பயனர்களுக்கு தடையில்லா மின் விநியோகம் வழங்கப்பட்டு வருகிறது. மின் பராமரிப்பு பணிகளின் போது மின்விநியோக பாதைகளுக்கு இடையூறாக உள்ளவைகளை கண்டறிந்து சரி செய்யப்படுகிறது. மேலும், மின் வயர்கள் & கம்பிகள் போன்றவைகள் மாற்றம் செய்யப்படுகிறது.
தமிழகத்தில் செப்.14 வரை மழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம் தகவல்!
இந்த பராமரிப்பு பணிகளின் போது மின் ஊழியர்கள் பாதுகாப்பிற்காகவும், மின் நுகர்வோர் பாதுகாப்பிற்காகவும் துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் முடிவடையும் வரை மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது. இந்த மின்தடை குறித்து அந்தந்த பகுதி செயற்பொறியாளர்கள் மின் பயனர்களுக்கு முன்னறிவிப்பு செய்கின்றன. இதனை அறிந்து மின் பயனர்கள் முன் கூட்டியே மின் சார்ந்த பாதைகளை முடித்து விடுகின்றனர். மற்ற மாவட்டங்களை தொடர்ந்து மயிலாடுதுறை மாவட்டத்தில் நீடூர், பெரம்பூர், கடலங்குடி ஆகிய பகுதிகளுக்கு உட்பட்ட துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
Exams Daily Mobile App Download
அதனால் கங்கணம்புத்தூர், மேலாநல்லூர், நடராஜபுரம், கீழமருதாந்தநல்லூர், மேல மருதாந்தநல்லூர், பொன்மாசநல்லுா், பெரம்பூா், கடக்கம், கிளியனூர், சேத்தூா், முத்தூா், எடக்குடி, பாலூர், கொடைவிளாகம், கோழிகுத்தி, ஆத்தூர், கடலங்குடி, வாணாதிராஜபுரம், சோழம்பேட்டை, மாப்படுகை, முருகமங்கலம் திருமணஞ்சேரி, ஆலங்குடி ஆகிய பகுதிகளிலும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்