தமிழகத்தில் நாளை (ஆக. 24) எந்தெந்த ஏரியாக்களில் Power Cut – முழு விவரம் இதோ!

0
தமிழகத்தில் நாளை (ஆக. 24) எந்தெந்த ஏரியாக்களில் Power Cut - முழு விவரம் இதோ!
தமிழகத்தில் நாளை (ஆக. 24) எந்தெந்த ஏரியாக்களில் Power Cut - முழு விவரம் இதோ!
தமிழகத்தில் நாளை (ஆக. 24) எந்தெந்த ஏரியாக்களில் Power Cut – முழு விவரம் இதோ!

நாமக்கல் மாவட்ட துணை மின் நிலையத்தில் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் மின்தடை செய்யப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது. மேலும் மின்தடை அறிவிக்கப்பட்ட பகுதிகள் குறித்து இந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மின்தடை:

மின்சாரம் என்பது இன்றைய காலகட்டத்தில் மிகவும் இன்றியமையாத ஒரு அத்தியாவசிய தேவையாக உள்ளது. முந்தைய காலத்தில் மின்சாரம் இல்லாத நிலை ஒன்று இருந்து வந்தது. ஆனால் தற்போது மின்சாரம் இல்லாமல் எந்த ஒரு செயல்பாடும் நடைபெற முடியாத நிலை வந்துள்ளது. இதற்கு காரணம் பெருகி வரும் மக்கள் தொகை மற்றும் வளர்ந்து வரும் பொருளாதார வளர்ச்சி போன்றவைகள் ஆகும். ஒன்றிய அரசும் அதற்கேற்றவாறு மக்களுக்கு தரமான மின் சேவையை வழங்க வேண்டும் என்ற முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.

SBI வாடிக்கையாளர்களுக்கு முக்கிய எச்சரிக்கை – ATM களில் புதிய விதிகள் அமல்!

இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் மாநிலங்கள் வாரியாக வழங்கப்பட்டு மாநிலங்களிடம் இருந்து மாவட்டங்களில் உள்ள துணை மின் நிலையங்களுக்கு அனுப்பப்படுகிறது. அந்த துணை மின் நிலையங்களின் மூலம் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் விநியோகம் செய்யப்படுகிறது. அத்தகைய துணை மின் நிலையங்களை பராமரிக்கும் பொருட்டு மாதந்தோறும் பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம். இந்த பராமரிப்பு பணிகளின் போது துணை மின் நிலையங்களை சுற்றியுள்ள பகுதிகளில் மின் கம்பிகளை சரிசெய்தல், மின் இணைப்புகளுக்கு இடையூறாக இருக்கும் மரங்கள், மரக்கிளைகள் போன்றவற்றை அகற்றுதல் போன்ற பணிகளில் மின் ஊழியர்கள் பணியில் ஈடுபடுவார்கள். இவ்வாறு பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கு எந்தவித உயிரிழப்பும், இடையூறும் ஏற்படாதவாறு மின்தடை அறிவிக்கப்படுகிறது.

அந்த வகையில் நாமக்கல் மாவட்ட துணை மின் நிலையத்தில் நாளை (ஆகஸ்ட் 24) பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் நாமக்கல் நகரம், நல்லிபாளையம், அய்யம்பாளையம், உத்தமபாளையம், கொண்டிசெட்டிபட்டி, வகுரம்பட்டி, வசந்தபுரம், வேப்பநத்தம், பெரியப்பட்டி, கொசவம்பட்டி, ரெட்டிபட்டி, தூசூர், முதலைப்பட்டி, போதுப்பட்டி, என்.ஜி.ஓ. காலனி, வீசாணம், சின்ன முதலைப்பட்டி ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று நாமக்கல் செயற்பொறியாளர் நாகராஜன் தெரிவித்துள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!