தமிழகத்தில் 3,000 மெகா வாட் மின்சாரம் வாங்க மின்வாரியம் ‘டெண்டர்’ – முழு விவரம் இதோ!
தமிழக மின் வாரியத்தின் மின்சார தேவையை பூர்த்தி செய்ய 3,000 மெகா வாட் மின்சாரம் தனியார் நிறுவனங்களிடம் இருந்து கொள்முதல் ‘டெண்டர்’ கோரியுள்ளது. தற்போது சொந்த நிறுவனங்களில் இருந்து கிடைக்கும் மின்சாரம் பற்றாக்குறையாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்சார டெண்டர்:
கடந்த சில நாட்களாக தமிழகத்தில் உள்ள மின்சார வாரியத்தில் மின்சார உற்பத்தி குறைந்து வருகிறது. எனவே தமிழகத்தில் தற்போது உற்பத்தி ஆகும் மின்சாரம் போதுமான அளவு இல்லாமல் பற்றாக்குறையாக இருக்கிறது. கடந்த மே மாதத்தில் காற்றாலை சீசன் தொடங்கப்பட்டாலும் மழை காரணமாக சரியாக காற்று வீசாத காரணத்தினால் உற்பத்தி அளவு வழக்கமாக இருப்பதை விட குறைவாக இருந்தது. இந்நிலையில் காற்றாலை சீசன் செப்டம்பர் மாதம் வரை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
வழக்கமாக இப்படி மின் தட்டுப்பாடு இருக்கும் போது மத்திய அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் இருந்து மின்சாரம் கொள்முதல் செய்யும், அவ்வாறு செய்யாமல் இருந்தால் வருகிற கோடை காலத்தில் மின்தட்டுப்பாடு அதிகமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் செப்டம்பர் 20 ஆம் தேதி முதல் நவம்பர் 15 ஆம் தேதி வரையிலான காலத்தில் மின் தேவையை பூர்த்தி செய்ய, ‘ரவுண்ட் தி கிளாக்’ எனப்படும் 24 மணி நேரமும் பயன்படுத்தும் வகையில், 1,000 மெகா வாட் மின்சாரம் கொள்முதல் செய்ய மின் வாரியம் தற்போது டெண்டர் கோரியுள்ளது.
TN TET தேர்வில் வெற்றி பெற சிறந்த பயிற்சி வகுப்புகள் – குறைந்த கட்டணம் மட்டுமே
அது மட்டுமில்லாமல் 2023 ஆம் ஆண்டு கோடை கால மின்தேவையை சமாளிக்க பிப்ரவரி 15 ஆம் தேதி முதல் மே 20 ஆம் தேதி வரை 24 மணி நேரமும் பயன்படுத்தும் வகையில், 2,000 மெகா வாட் மின்சாரம் கொள்முதல் செய்ய டெண்டர் கோரப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவ மழை அக்டோபர் மாதம் தொடங்கப்பட இருக்கும் நிலையில் மின் தேவையானது வழக்கமாக இருப்பதை விட குறைவாக இருக்கும். அதனால் செப்டம்பர் முதல் நவம்பர் வரை மின்சாரம் கொள்முதல் செய்ய, மின் வாரியம் டெண்டர் கோரியிருப்பது அவசியம் தானா என்ற கேள்வி எழுந்துள்ளது.