TNPSC Group 2, 2A தேர்வு ஒத்திவைப்பு? முக்கிய அறிவிப்பு வெளியீடு!
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அரசுத்துறைகளில் 5529 காலியிடங்களை நிரப்பும் வகையில் குரூப் 2, குரூப் 2ஏ தேர்வு அறிவிப்பை வெளியிட்டது. இந்த அறிவிப்பு அடிப்படையில் குரூப் 2, குரூப் 2ஏ முதல்நிலைத் தேர்வு வரும் மே 21 ஆம் தேதி நடைபெற உள்ளது.
குரூப் 2 தேர்வு:
தமிழக அரசின் பல்வேறு துறைகளுக்கு தேவையான பணியாளர்களை, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தேர்வு செய்து வருகிறது. எனவே திறமையான ஊழியர்களை கண்டறிய பல்வேறு போட்டித்தேர்வுகள் மற்றும் நேர்காணல் ஆகியவற்றை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தேர்வுகள் அரசு பணிகளின் அடிப்படையில் குரூப் 1, குரூப் 2, குரூப் 3 மற்றும் குரூப் 4 மற்றும் குரூப் 5, 6, 7, 8 ஆகிய வகைகளில் நடைபெற்று வருகிறது. நடப்பு ஆண்டிற்கான குரூப் 2, குரூப் 2 ஏ தேர்வுக்கான அறிவிப்பை தேர்வுத்துறைத் தலைவர் பாலச்சந்திரன் கடந்த பிப்ரவரி மாதம் வெளியிட்டார்.
Exams Daily Mobile App Download
இந்த அறிவிப்பின்படி குரூப் 2, குரூப் 2 ஏ தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் பிப்ரவரி 23 முதல் மார்ச் 23 வரை அளிக்கப்பட்டது. குரூப் 2, குரூப் 2 ஏ தேர்வு மூன்று கட்டங்களாக நடைபெறும். மேலும் மே 21 ஆம் தேதி முதற்கட்ட தேர்வு நடைபெறும். இந்த தேர்வுக்கான ரிசல்ட் ஜூன் மாதம் வெளியிடப்படும் என்றும் முதன்மை எழுத்துத் தேர்வுகள் செப்டம்பர் மாதம் நடைபெறும் என்றும் பாலச்சந்திரன் கூறினார். தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு நேர்முகத்தேர்வு அல்லாத பதவிகளுக்கு டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் கலந்தாய்வு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
TNPSC 7382 காலிப்பணியிடங்கள் குறித்த முக்கிய அறிவிப்பு – Group 4 தேர்வில் வெற்றி பெற டிப்ஸ்!
இந்த நிலையில் மே 21 ஆம் தேதி நடைபெற உள்ள குரூப் 2 தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை டி.என்.பி.எஸ்.சி அண்மையில் இணையதளத்தில் வெளியிட்டது. மேலும் விண்ணப்பதாரர்கள் www.tnpsc.gov.in மற்றும் www.tnpscexams.in என்ற வலைதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் மே 21ம் தேதி குரூப் – 2 தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். இத்தேர்வுக்கு 11.78 லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். அதில் 4.96 லட்சத்திற்கும் மேற்பட்ட ஆண்கள், 6.81 லட்சத்திற்கும் மேற்பட்ட பெண்கள் விண்ணப்பித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.