TN TRB முதுநிலை ஆசிரியர் பணிக்கான தேர்வு தள்ளிவைப்பு – தனியார் பள்ளி ஆசிரியர்கள் கோரிக்கை!

0
TN TRB முதுநிலை ஆசிரியர் பணிக்கான தேர்வு தள்ளிவைப்பு - தனியார் பள்ளி ஆசிரியர்கள் கோரிக்கை!
TN TRB முதுநிலை ஆசிரியர் பணிக்கான தேர்வு தள்ளிவைப்பு - தனியார் பள்ளி ஆசிரியர்கள் கோரிக்கை!

TN TRB முதுநிலை ஆசிரியர் பணிக்கான தேர்வு தள்ளிவைப்பு – தனியார் பள்ளி ஆசிரியர்கள் கோரிக்கை!

தமிழகத்தில் முதுநிலை ஆசிரியர் பணிக்கான தேர்வு 12ம் தேதி முதல் 20ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த நிலையில் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தேர்வுகளை வேறொரு நாளுக்குத் தள்ளி வைக்க தனியார் பள்ளி ஆசிரியர்கள் தமிழக முதலமைச்சருக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

முதல்வருக்கு கோரிக்கை:

தமிழகத்தில் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் போட்டி தேர்வுகள் நடத்தப்பட்டு ஆசிரியர் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது. அந்த வகையில் அரசு பள்ளியில் காலியாக உள்ள முதுநிலை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட அண்மையில் அறிவிப்பு வெளியாகி விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. அந்த வகையில் மாநிலம் முழுவதும் காலியாக உள்ள 2,207 பணியிடங்களுக்கு இந்தத் தேர்வு அறிவிக்கப்பட்டு, மாநிலம் முழுவதும் 2.6 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இந்நிலையில் முதுநிலை ஆசிரியர் பணிக்கான தேர்வு பிப்ரவரி 12ஆம் தேதி தொடங்கி 20ஆம் தேதி வரை நடைபெறும் என கால அட்டவணை வெளியானது.

பள்ளிக்கு ஹிஜாப் அணிந்து வரும் மாணவிகள், வகுப்பறைக்குள் அனுமதிக்கலாமா? கல்வித்துறை விளக்கம்!

மேலும் இந்த தேர்வுக்கு மாநில முழுவதும் 180 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இவர்களில் சரி பாதிக்கும் அதிகமானோர் தனியார் பள்ளி ஆசிரியர்கள் இந்த தேர்வை எழுதுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு நேற்று முதல், திருப்புதல் தேர்வு தொடங்கி பிப்ரவரி 17ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த வகையில் பொது தேர்வும் 17ம் தேதி வரை நடைபெற உள்ளது. எனவே திருப்புதல் தேர்வு மற்றும் பொது தேர்வுக்கு மாணவர்களை தயார்படுத்த வேண்டிய சூழலில் தனியார் பள்ளி ஆசிரியர்கள் உள்ளனர்.

TN Job “FB  Group” Join Now

இந்த நிலையில் இவர்கள் ஆசிரியர் தேர்வு வாரியத் தேர்வை இழக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. இந்த வகையில் தேர்வை எழுதும் தேர்வர்கள் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பணிக்கு நியமிக்கப்பட்டு உள்ளனர். இதன் வகையில் பிப்ரவரி 10 ஆம் தேதியும், பிப்ரவரி 18 ஆம் தேதியும் வாக்குப்பதிவுக்கான பயிற்சி நடத்தப்படும். எனவே 18ஆம் தேதி ஆசிரியர் தேர்வை எழுத முடியாது. இந்த நிலையில் தமிழ்நாடு ஆசிரியா் தேர்வு வாரிய தேர்வுகளை சில தினங்களுக்கு தள்ளிவைத்துவிட்டு, பள்ளித் தேர்வுகள், இதர தகுதித் தேர்வுகள் நடைபெறாத நாட்களில் அட்டவணையிட்டு நடத்த வேண்டும் என தனியார் பள்ளி ஆசிரியர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!