செப்டம்பர் 4 வரை பள்ளிகள் திறப்பு மீண்டும் ஒத்திவைப்பு – மாநில அரசு அறிவிப்பு!
ஹிமாச்சலப் பிரதேச மாநிலத்தில் தற்போதுள்ள கொரோனா சூழலை ஆய்வு செய்த அரசு பள்ளிகளை மீண்டும் திறக்கும் முடிவை ஒத்தி வைத்துள்ளது. அதன் படி வரும் செப்டம்பர் மாதம் 4 ஆம் தேதி வரை பள்ளிகள் மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிகள் திறப்பு
கொரோனா 2 ஆம் அலை பரவல் காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் முதல் மூடப்பட்டுள்ளதான பள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்து ஹிமாச்சலப் பிரதேச அரசு கடந்த சில நாட்களாக ஆலோசித்து வந்தது. இதையடுத்து மாநிலம் முழுவதும் தற்போதுள்ள கொரோனா சூழலை ஆய்வு செய்கையில் புதிய பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருவதாக கண்டறியப்பட்டுள்ளது. அதனால் பள்ளிகளை மீண்டும் திறப்பதற்கான முடிவை மாநில அரசு ஒத்திவைத்துள்ளது.
சென்னை போட் கிளப் சாலைக்கு தனது வீட்டை மாற்றிய நடிகர் கமல்ஹாசன் – வெளியான தகவல்!
முன்னதாக ஆகஸ்ட் 28 ஆம் தேதி வரை பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டிருக்க வேண்டும் எனவும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலக ஊழியர்கள் அனைவரும் பள்ளிகளுக்கு வரலாம் எனவும் சமீபத்திய அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கிடையில் கொரோனா புதிய வழக்குகள் திடீரென அதிகரித்ததால், இமாச்சலப் பள்ளி திறப்பு தேதியை ஒத்திவைக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது. அந்த வகையில் வரும் செப்டம்பர் 4 ஆம் தேதி வரை பள்ளிகளை மூடுவதற்கான உத்தரவை தொடர அரசு முடிவு செய்துள்ளது.
TN Job “FB Group” Join Now
இது தொடர்பாக மாநில கல்வி அமைச்சர் கோவிந்த் சிங் தாக்கூர் கூறுகையில், ‘மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு ஹிமாச்சலப் பிரதேசத்தில் உள்ள பள்ளிகள் அனைத்தையும் மீண்டும் திறப்பதற்கான முடிவு கொரோனா சூழ்நிலை காரணமாக ஒத்தி வைக்கப்படுகிறது’ என குறிப்பிட்டுள்ளார். எனினும் குடியிருப்பு பகுதிகளில் உள்ள பள்ளிகள் மட்டும் வழக்கம் போல செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இதனிடையே ஹிமாச்சலப் பிரதேசத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 281 புதிய பாதிப்புகள் மற்றும் நான்கு இறப்புகள் பதிவாகியுள்ளன.