1 முதல் 5ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு ஒத்திவைப்பு? அக்.15 பிறகு ஆலோசனை!
கொரோனா தாக்கம் படிப்படியாக குறைந்து வரும் நிலையில் ஒன்று முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பது குறித்த கேள்விக்கு மாநில அரசு விளக்கம் அளித்துள்ளது.
பள்ளிகள் திறப்பு:
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வந்த நிலையில் அதிகமானோர் நோய் தாக்கத்தால் பாதிக்கப்பட்டனர். அதனை தொடர்ந்து மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதன் காரணமாக நோய்த்தாக்கம் படிப்படியாக குறைந்து வந்தது. கர்நாடகா மாநிலத்தில் நாள் ஒன்றுக்கு 50 ஆயிரம் என நோய்த்தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை பதிவாகி வந்த நிலையில் தற்போது படிப்படியாக குறைந்து வருகிறது.
இந்தியாவில் ஒரே நாளில் 18,870 பேருக்கு கொரோனா தொற்று – 378 பேர் உயிரிழப்பு!
நேற்று 629 பேருக்கு கொரோனா தாக்கம் உறுதி செய்யப்பட்ட நிலையில் 12,634 பேர் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. நோய்த் தாக்கம் குறைந்து வருவதால் மாநில அரசு பல்வேறு தளர்வுகளை வழங்கி வருகிறது. மேலும் பள்ளிகளில் 6 முதல் 12ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களில் 50% பேர் சுழற்சி முறையில் நேரடி வகுப்புகளில் கலந்து கொள்ள வழங்கப்பட்டிருந்தது. பள்ளி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு கொரோனா தடுப்பு நெறிமுறைகள் தீவிரமாக பின்பற்றப்பட்டு வந்தது.
இரட்டை குழந்தையை கண்டுபிடிக்க கண்ணம்மாவிற்கு உதவி செய்யும் பாரதி? சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!
தற்போது கொரோனா தாக்கம் பரவும் விகிதம் குறைந்து வரும் நிலையில் வகுப்பறைகளில் 100% மாணவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து 1 முதல் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கும் தேதி குறித்து பல்வேறு தரப்பினர் கேள்வி எழுப்பி வருகின்றனர். இது தொடர்பாக மாநில அரசின் தொழில்நுட்ப ஆலோசனை குழு கூட்டம் நடைபெற்றது. அதில் குழந்தைகளுக்கு கொரோனா தாக்கம் குறைவாக உள்ளதாக கூறப்பட்டது. எனவே ஒன்று முதல் 5 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு குறித்து வரும் அக்டோபர் 15 ஆம் தேதி கொண்டாடப்படும் தசரா பண்டிகைக்கு பின்னர் ஆலோசிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.