பள்ளி, கல்லூரிகள் திறப்பு ஒத்திவைப்பு & சபரிமலை கோவிலுக்கு செல்ல தடை – கனமழை எதிரொலி!
கேரள மாநிலம் முழுவதும் கனமழை பெய்து வருவதால் இயல்பு வாழ்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பள்ளிகள் திறக்கும் தேதி தள்ளிவைக்கப்பட்டுள்ளது மற்றும் சபரிமலை கோயிலுக்கு செல்ல 19ம் தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.
கனமழை எதிரொலி:
தற்போது கேரளாவில் வடகிழக்கு பருவ மழைக்காலம் தொடங்கியுள்ளது. இதன் காரணமாக மாநிலம் முழுவதும் பலத்த மழை பெய்து வருகிறது. தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் கோட்டயம், பத்தனம்திட்டா, இடுக்கி உள்ளிட்ட மாவட்டங்களில் இயல்பு வாழ்க்கை ஸ்தம்பித்துள்ளது. பல பகுதிகளில் மண்சரிவு ஏற்பட்டு இதன் காரணமாக பிற பகுதிகளில் இருந்து சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளது.
ஹேமாவை தனது வீட்டிற்கு அழைத்து செல்லும் கண்ணம்மா, அதிர்ச்சியில் பாரதி – சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!
கேரளாவில் கொரோனா தொற்றின் 2ம் அலையின் பாதிப்புகள் மற்ற மாநிலங்களை விட அதிக அளவில் இருந்தது. மத்திய மற்றும் மாநில அரசுகளின் தீவிர முயற்சியின் விளைவால் சமீபத்தில் தான் தொற்று கட்டுக்குள் வந்துள்ளது. இதனால் கடுமையாக விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளில் தற்போது தான் கேரள அரசு தளர்வுகளை அளித்துள்ளது. இதனால் பல மாதங்களாக மூடப்பட்டிருந்த பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் வரும் 18ம் தேதி திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்தில் வேலை 2021 – தேர்வு, நேர்காணல் இல்லை!!
ஆனால் தொடர் மழையின் காரணமாக தற்போது வரும் 20ம் தேதி பள்ளிகள் திறக்கப்படுவதாக அரசு அறிவித்துள்ளது. மேலும், ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை கோயில் நடை திறக்கப்பட்டுள்ளது. கோவில் உள்ள பத்தனம் திட்டா மாவட்டத்தில் கனமழை காரணமாக பாதிப்புகள் அதிகமாக இருப்பதால் கோயிலுக்கு பக்தர்கள் செல்ல வரும் 19ம் தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், பக்தர்களின் பாதுகாப்பு கருதி கேரள அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.