வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்தம் அறிவிப்பு தள்ளி வைப்பு – வெளியான அப்டேட்!

0
வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்தம் அறிவிப்பு தள்ளி வைப்பு - வெளியான அப்டேட்!
வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்தம் அறிவிப்பு தள்ளி வைப்பு - வெளியான அப்டேட்!
வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்தம் அறிவிப்பு தள்ளி வைப்பு – வெளியான அப்டேட்!

நாடு முழுவதும் உள்ள வங்கி ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட இருப்பதாக தெரிவித்த நிலையில், தற்போது வேலை நிறுத்தம் அறிவிப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலை நிறுத்தம்:

அகில இந்திய வங்கி சங்கத்தினர் சார்பில் வாரத்துக்கு 5 நாள் வேலை, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உட்பட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற ஜனவரி 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் வேலை நிறுத்தம் போராட்டத்தில் ஈடுபட இருப்பதாக அறிவிப்பு வெளியானது. அதனால் வங்கி சேவை பாதிக்கப்படும் என்பதால், பல பொதுத்துறை வங்கிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

TN TET இரண்டாம் தாள் தேர்வுக்கான தேதி வெளியீடு – ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு!

Telegram Updates for Latest Jobs & News – Join Now

மேலும் வங்கி ஊழியர்கள் போராட்ட அறிவிப்பை கைவிட வேண்டும் என மும்பையில் நேற்று சமரச பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதில் வங்கி ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவது குறித்து, உடன்பாடு ஏற்பட்டது. அதனால் வங்கி ஊழியர்கள் போராட்டத்தை தள்ளி வைத்து இருப்பதாக தெரிவித்துள்ளனர். இருந்த போதிலும் ஜனவரி 31 ஆம் தேதி மீண்டும் பேச்சு வார்த்தை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!