கிரெடிட் கார்டுகளுக்கான புதிய விதிமுறைகள் ஒத்திவைப்பு? ரிசர்வ் வங்கி விளக்கம்!

0
கிரெடிட் கார்டுகளுக்கான புதிய விதிமுறைகள் ஒத்திவைப்பு? ரிசர்வ் வங்கி விளக்கம்!
கிரெடிட் கார்டுகளுக்கான புதிய விதிமுறைகள் ஒத்திவைப்பு? ரிசர்வ் வங்கி விளக்கம்!
கிரெடிட் கார்டுகளுக்கான புதிய விதிமுறைகள் ஒத்திவைப்பு? ரிசர்வ் வங்கி விளக்கம்!

நாடு முழுவதும் உள்ள வங்கிகளில் கிரெடிட் கார்ட் குறித்த புதிய விதிமுறைகள் ஜூலை 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வர இருப்பதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் வங்கிகளின் கோரிக்கையின்படி அக்டோபர் மாதம் முதல் அமலுக்கு வர இருப்பதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

புதிய விதிமுறைகள்:

ரிசர்வ் வங்கி கிரெடிட் கார்ட் வழங்கும் வங்கிகளுக்கு புதிய விதிமுறைகளை வெளியிட்டு இருக்கிறது. அதன் படி ஒரு வங்கி அல்லது நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு கிரெடிட் கார்ட் வழங்கிய பின் அதை 30 நாட்களில் ஆக்டிவேட் செய்ய வேண்டும். அது போல செய்யாமல் இருந்தால் வங்கிகள் அல்லது கார்டு வழங்கிய நிறுவனம் பயனாளியிடம் இருந்து ஓடிபி பெற்று அதன் பின் கார்டை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். அப்படி வாடிக்கையாளர்கள் ஆக்டிவேட் செய்ய அனுமதியளிக்காவிட்டால் அந்த கார்டை கூடுதல் கட்டணம் இல்லாமல் அடுத்த 7 நாட்களுக்குள் திரும்ப பெற வேண்டும்.

Exams Daily Mobile App Download

கிரெடிட் கார்டின் பணத்தின் வரம்பை உயர்த்துவதற்கு முன்னதாக வாடிக்கையாளரிடம் அனுமதி பெற்று உயர்த்த வேண்டும். கார்டு உரிமையாளரின் சம்மதம் இன்றி அளவை உயர்த்தக்கூடாது. கிரெடிட் கார்டு நிலுவைத் தொகையை செலுத்துவதற்கான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள், செலுத்த வேண்டிய குறைந்தபட்ச தொகை என அனைத்தையும் வாடிக்கையாளர்களுக்கு கட்டாயம் தெரிவிக்க வேண்டும். பில்லிங் வசூலிப்பது மற்றும் கிரெடிட் கார்டை முடக்குவது குறித்த தெளிவான வழிமுறைகள் பற்றி வாடிக்கையாளர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இனி தொடர் மின்தடைகளுக்கு முற்றுப்புள்ளி – அமைச்சர் விளக்கம்!

இந்த வழிமுறை ஒவ்வொரு வங்கிக்கும், பேமெண்ட் வங்கிக்கும், மாவட்ட அளவிலான கூட்டுறவு வங்கிகள், மாநில கூட்டுறவு வங்கிகள், வங்கிசாராத நிறுவனங்களுக்கும் பொருந்தும். பில்லிங் தேதி முந்தைய மாதத்தின் 11ம்தேதி தொடங்கி, நடப்பு மாதத்தின் 10ம் தேதி முடிய வேண்டும். கார்டு ஸ்டேட்மென்ட் ஒவ்வொரு மாதத்தின் 10ம் தேதி உருவாக்கப்படும். வாடிக்கையாளர்கள் கிரெடிட் கார்டுக்கு பில் செலுத்துவதில் தாமதம் இருக்க கூடாது. கார்டு வழங்குவோர், கிரெடிட் கார்டுக்கான கட்டணங்களை வாடிக்கையாளருக்கு முறையாக மின்அஞ்சல் மூலமாக தெரிவிக்க வேண்டும். வாடிக்கையாளர் பணத்தை செலுத்துவதற்கு 14 நாட்கள் வரை அவகாசம் அளிக்க வேண்டும் அதன் பின் வட்டி வசூலிக்க வேண்டும். இந்த புதிய வழிமுறைகள் ஜூலை 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்ட நிலையில் தற்போது வங்கிகளின் கோரிக்கையை அடுத்து அக்டோபர் முதல் அமல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!