NEET தேர்வு முதுகலை கலந்தாய்வு செப்டம்பர் 19ம் தேதிக்கு ஒத்திவைப்பு – மத்திய சுகாதாரத்துறை வெளியீடு!
நீட் முதுகலை கலந்தாய்வு இன்று ( செப்டம்பர் 1) நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று மற்றொரு தேதிக்கு ஒத்தி வைப்பதாக தேசிய தேர்வு முகமை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது தொடர்பான கூடுதல் தகவல்களை பார்ப்போம்.
கலந்தாய்வு ஒத்திவைப்பு
நாடு முழுவதும் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளில் சேருவதற்காக நீட் எனப்படும் நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிராக பல்வேறு தரப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். அத்துடன் இத்தேர்வு குறித்த பயத்தால் ஏராளமான மாணவர்கள் தங்களின் உயிரை மாய்த்து கொள்கின்றனர். மேலும் தமிழக அரசு சார்பில் சட்டப்பேரவையில் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனால் இதற்கு தமிழக ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் வைத்துள்ளார்.
இந்த நிலையில் 2022ம் ஆண்டுக்கான முதுகலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வு கடந்த மே மாதம் 21ம் தேதி நடைபெற்றது. இத்தேர்வு முடிவுகள் ஜூன் 2ம் தேதி வெளியிடப்பட்டு மாணவர்களின் தரவரிசை பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இதையடுத்து இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 50% அகில இந்திய மருத்துவ இடங்களுக்கும், 50% மாநில இடங்களுக்கான கலந்தாய்வு இன்று நடைபெறும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்திருந்தது. ஆனால் தரவரிசைப் பட்டியலில் பல்வேறு குளறுபடிகள் உள்ளதாக மாணவர்கள் புகார் தெரிவித்தனர்.
தமிழகத்தில் கனமழை காரணமாக முன்னேற்பாடுகள் தீவிரம் – அமைச்சர் விளக்கம்!
அதனால் மாணவர்களின் மதிப்பெண்களை மறுமதிப்பீடு செய்ய வேண்டும் என்றும் உச்சநீதிமன்றத்தில் மாணவர்கள் மனு தாக்கல் செய்துள்ளனர். அதன்பின்பு கலந்தாய்வு நடத்தப்பட வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர். இந்த வழக்கு விசாரணையின் போது நீதிபதிகள் தெரிவித்துள்ளதாவது, நீட் முதுகலை கலந்தாய்வு திட்டமிட்டபடி நடத்தப்படும் என்றும் இதனை ஒத்தி வைக்க முடியாது என்றும் அறிவித்துள்ளார். அதன்படி இன்று நடைபெற இருந்த கலந்தாய்வு செப்டம்பர் 19ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்