காஷ்மீர் பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு – கடும் பனி பொழிவின் எதிரொலி!

0
காஷ்மீர் பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு - கடும் பனி பொழிவின் எதிரொலி!
காஷ்மீர் பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு - கடும் பனி பொழிவின் எதிரொலி!
காஷ்மீர் பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு – கடும் பனி பொழிவின் எதிரொலி!

காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. இதன் காரணமாக காஷ்மீர் பல்கலைக்கழகத்தில் நடைபெறவிருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

தேர்வுகள் ஒத்திவைப்பு:

இந்தியாவில் நடப்பு ஆண்டு எப்போதும் இல்லாத அளவுக்கு கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. கடந்த டிசம்பர் மாதம் தொடங்கிய இந்த பனியால் இந்தியாவின் வட மாநிலங்களான டெல்லி, உத்தரபிரதேசம், பஞ்சாப், ஹரியானா, ஜார்கண்ட் உள்ளிட்ட பல மாநிலங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

ஆதார்-பான் இணைப்பின் நிலையை ஆன்லைனில் சரிபார்க்க வேண்டுமா? Simple Steps இதோ!

Follow our Instagram for more Latest Updates

நிலவும் கடும் குளிரால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்த சூழலில் மாணவர்களின் உடல் நலனை கருத்தில் கொண்டு அரையாண்டு தேர்வுக்கு பிறகு பள்ளிகளுக்கு தொடர்ந்து விடுமுறை அளிக்கப்பட்டது. மற்ற இடங்களை தொடர்ந்து ஜம்மு காஷ்மீரிலும் பனி கொட்டி தீர்த்து வருகிறது. சாலைகளில் கொட்டி கிடக்கும் பணியால் மக்கள் மற்றும் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து சாலைகளில் உள்ள பனியை அகற்ற உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த கடும் பனி பொழிவின் காரணமாக காஷ்மீர் பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெற இருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மாற்று தேதியில் இந்த தேர்வுகள் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பனியால் ஸ்ரீநகரில் இருந்து புறப்படும் விமானங்கள் தாமதமாக புறப்பட்டது.

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!