பள்ளி மாணவர்களுக்கான தேர்வுகள் ஒத்திவைப்பு, வகுப்புகள் மூடல் – அரசு திடீர் முடிவு!

0
பள்ளி மாணவர்களுக்கான தேர்வுகள் ஒத்திவைப்பு, வகுப்புகள் மூடல் - அரசு திடீர் முடிவு!
பள்ளி மாணவர்களுக்கான தேர்வுகள் ஒத்திவைப்பு, வகுப்புகள் மூடல் - அரசு திடீர் முடிவு!
பள்ளி மாணவர்களுக்கான தேர்வுகள் ஒத்திவைப்பு, வகுப்புகள் மூடல் – அரசு திடீர் முடிவு!

இலங்கையில் நிலவி வரும் எரிபொருள் தட்டுப்பாட்டை ஓரளவுக்கு சமாளிப்பதற்காக நாளை முதல் நடக்கவிருக்கும் தேர்வுகளை இரண்டு வாரத்திற்கு ஒத்தி வைத்துள்ளதாக இலங்கை அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

தேர்வுகள் ஒத்திவைப்பு:

இலங்கை எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு கடுமையான பொருளாதார சிக்கலில் மாட்டி தவித்து வருகிறது. இலங்கைக்கு உதவ எந்த நாடும் முன்வரவில்லை. மற்ற நாடுகளிடமிருந்து எரிபொருள் இறக்குமதியை எதிர்பார்த்து இலங்கை அரசு காத்துக் கொண்டிருக்கிறது. இலங்கையில் எரிபொருள் மற்றும் டீசல் தட்டுப்பாட்டால் பல மணி நேரமாக பெட்ரோல் நிலையங்களில் பயணிகள் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும், ஒரு லிட்டர் பெட்ரோலின் விலையே பல நூறு ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Exams Daily Mobile App Download

பெட்ரோல்-டீசல் போன்ற எரிபொருட்களின் விலை மட்டுமல்லாமல் அன்றாடம் வீட்டில் உபயோகப்படுத்தப்படும் பொருட்களிலிருந்து காய்கறிகளின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது. இந்த பொருளாதார நெருக்கடியை சமாளிப்பதற்காக ஒவ்வொரு வீட்டிலும் சொந்தமாக காய்கறித் தோட்டத்தை உருவாக்கும்படி அரசு விழிப்புணர்வு வழங்கி வருகிறது. எரிபொருள் தட்டுப்பாட்டை குறைக்க பல நாடுகளிடம் இருந்து இலங்கை எரிபொருளை இறக்குமதியாக பெற உள்ளது.

தமிழகத்தில் உள்ள அறநிலையத்துறை கோவில்களில் அர்ச்சகர்கள் நியமனம் – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

மேலும் எரிபொருள் உபயோகத்தை சிறிதளவு குறைப்பதற்காக வாரத்திற்கு ஒருநாள் ஊழியர்களுக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. ஊழியர்களுக்கு ஒரு நாள் விடுமுறை அளித்தால் அந்த நாளுக்குரிய எரிபொருள் தேவை குறையும் என்பதால் தான் அரசு இத்தகைய முடிவெடுத்துள்ளது. மேலும் எரிபொருள் தட்டுப்பாட்டை ஓரளவுக்கு குறைக்க நாளை முதல் நடக்கவிருந்த தேர்வுகள் இரண்டு வாரங்களுக்கு ஒத்தி வைக்கப்பட உள்ளதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது. மேலும், அரசு ஊழியர்களை வீட்டிலிருந்தே பணி புரியும் படி அறிவுறுத்தியுள்ளது. இதனையடுத்து, இலங்கையில் நிலவி வரும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக இன்றிலிருந்து வரும் ஜூலை 1ஆம் தேதி வரை கொழும்பு மற்றும் இதர பகுதிகளில் பள்ளிகளுக்கு விடுமுறை எனவும் அந்நாட்டு கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!