ஜூலை 16 வரை அரசுப்பணியாளர் தேர்வுகள் ஒத்திவைப்பு – மாநில அரசு அறிவிப்பு!

0
ஜூலை 16 வரை அரசுப்பணியாளர் தேர்வுகள் ஒத்திவைப்பு - மாநில அரசு அறிவிப்பு!
ஜூலை 16 வரை அரசுப்பணியாளர் தேர்வுகள் ஒத்திவைப்பு - மாநில அரசு அறிவிப்பு!
ஜூலை 16 வரை அரசுப்பணியாளர் தேர்வுகள் ஒத்திவைப்பு – மாநில அரசு அறிவிப்பு!

கொரோனா பரவல் எதிரொலியாக ஒடிசா மாநிலத்தில் ஜூலை 16 வரை நடத்த திட்டமிடப்பட்டிருந்த அனைத்து தேர்வுகளையும் அடுத்த அறிவிப்பு வரும் வரை ஒத்திவைப்பதாக ஒடிசா மாநிலத்தின் பணியாளர்கள் தேர்வு ஆணையம் (OSSC) அறிவித்துள்ளது.

தேர்வுகள் ஒத்தி வைப்பு

ஒடிசா மாநிலத்தில் கொரோனா 2 ஆம் அலை காரணமாக ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாடுகளால் ஜூலை 16 ஆம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டிருந்த உதவி நூலகர் மற்றும் ஜூனியர் நூலகர் பதவிகளுக்கான கணினி திறன் சோதனை தேர்வுகளை ஒத்தி வைப்பதாக பணியாளர்கள் தேர்வு ஆணையம் அறிவித்துள்ளது. இது குறித்து OSSC கூறுகையில், ‘ஜூலை 16 வரை நடத்தப்பட இருந்த பணியாளர் தேர்வுகள் கொரோனா பொது முடக்கம் காரணமாக ஒத்தி வைக்கப்படுகிறது. திருத்தப்பட்ட தேர்வு அட்டவணை விரைவில் அறிவிக்கப்படும்.

ஜூலை 16 வரை அரசுப்பணியாளர் தேர்வுகள் ஒத்திவைப்பு – மாநில அரசு அறிவிப்பு!

தேர்வுகள் குறித்த மேலும் விவரங்களை அறிந்து கொள்ள ossc.gov.in என்ற வலைதளத்துடன் தொடர்ந்து தொடர்பில் இருக்குமாறு தேர்வாளர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்’ என்று தேர்வு ஆணையம் தனது அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவித்துள்ளது. முன்னதாக ஒடிசாவில் ஜூன் 28 ஆம் தேதி அன்று உதவி நூலகர் மற்றும் ஜூனியர் நூலகர் பதவிகளுக்கான கணினி திறன் சோதனை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. தற்போது மாநிலம் முழுவதும் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளதால், இந்த தேர்வுகள் ஜூலை 9 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

தவிர ஜூன் 29 ஆம் தேதி நடத்த திட்டமிடப்பட்டிருந்த ஒருங்கிணைந்த கணக்காய்வாளர் பதவிக்கான கணினி திறன் சோதனையும் ஜூலை 9 ஆம் தேதிக்கு மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதேபோல், ஜூலை 6 ஆம் தேதி நடத்த திட்டமிடப்பட்ட ஜூனியர் அசிஸ்டென்ட் பதவிக்கான தேர்வும், ஜூலை 8 ஆம் தேதி நடைபெற இருந்த தொழில்துறை ஊக்குவிப்பு அலுவலர் பதவிக்கான எழுத்துத் தேர்வும், ஜூலை 14 ஆம் தேதி நடத்த இருந்த உதவி அறிவியல் அலுவலர் பதவிக்கான முக்கிய எழுத்துத்தேர்வும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

அதே நேரத்தில் ஜூலை 20 முதல் ஆகஸ்ட் 5 வரையில் நடத்தப்படஉள்ள தேர்வுகளுக்கான அட்டவணையில் எந்த மாற்றங்களையும் தேர்வு ஆணையம் அறிவிக்கவில்லை. இருப்பினும், தேர்வுகள் குறித்த புதிய தகவல் மற்றும் மறு அறிவிப்பு தொடர்பான தகவல்களுக்காக OSSC வலைதளத்தை அடிக்கடி பார்வையிட வேண்டும் என தேர்வாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!