தமிழகத்தில் தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு தள்ளி வைப்பு? முக்கிய அறிவிப்பு!
தமிழக பள்ளிக்கல்வித்துறையில் நகராட்சி உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள தலைமை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில் காலியாக உள்ள இடங்களை பதவி உயர்வு மூலம் நியமனம் செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது. இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறைக்கு முக்கிய உத்தரவு ஒன்றை ஐகோர்ட் பிறப்பித்துள்ளது.
ஐகோர்ட் முக்கிய உத்தரவு:
ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் உள்ள பள்ளி தலைமை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கான பணி உயர்வு கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்த ஆண்டும் தமிழக பள்ளிக் கல்வித் துறையில் உள்ள அரசு, நகராட்சி உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள தலைமை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு பதவி உயர்வு வழங்குவது தொடர்பான கலந்தாய்வு கூட்டம் கல்வி தகவலியல் மேலாண்மை முறைமை (EMIS) மூலமாக இணைய வழியில் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டது.
Exams Daily Mobile App Download
இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘பள்ளிக்கல்வித்துறையில் நகராட்சி உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள தலைமை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில் காலியாக உள்ள இடங்களை பதவி உயர்வு கலந்தாய்வு ஜூலை 11ஆம் தேதி முதல் 15ம் தேதி வரையில் நடைபெற உள்ளது. அந்த வகையில், அரசு, நகராட்சி உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு ஜூலை 11ஆம் தேதி நடைபெற உள்ளது.
தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வில் 28,984 பேர் தேர்ச்சி – ஐகோர்ட்டில் தகவல்!
மேலும் அரசு, நகராட்சி, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு ஜூலை 12ஆம் தேதியும், அரசு, நகராட்சி உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு ஜூலை 13ஆம் தேதியும், இடைநிலை ஆசிரியர், சிறப்பாசிரியர்களுக்கு பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு கலந்தாய்வு ஜூலை 14, 15ஆம் தேதிகளிலும் நடைபெறும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
இருப்பினும் தற்போது அரசு பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கான கலந்தாய்வை 2 வாரங்களுக்கு தள்ளி வைக்க தமிழக அரசு பள்ளிக் கல்வித்துறைக்கு ஐகோர்ட் உத்தரவிட்டது. அதாவது பணியிட மாறுதலுக்கான கலந்தாய்வுக்கு பின் பதவி உயர்வு கலந்தாய்வு நடத்தக் கோரி தலைமை ஆசிரியர்கள் 2 பேர் வழக்கு தொடர்ந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.