தமிழகத்தில் 23 கல்லூரிகளில் அவசர மருத்துவ பட்ட மேற்படிப்பு – வருங்காலத்தில் கட்டாயமாக்க திட்டம்!
தமிழகத்தில் நாட்டிலேயே முதன்முறையாக 23 அரசு மருத்துவ கல்லூரிகளில் அவசர கட்டாய மருத்துவ மேற்படிப்பு தொடங்கப்பட்டுள்ளது. இந்த படிப்பு வரும் காலத்தில் கட்டாயமாக்க வாய்ப்புகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவசர மருத்துவ மேற்படிப்பு:
மருத்துவ படிப்பில் சமீப காலமாக அதிநவீன முன்னேற்றங்கள் கண்டறியப்பட்டு அவை உடனடியாக செயல்பாட்டிற்கு கொண்டுவரப்படுகிறது. இதன் விளைவாக மருத்துவ உதவிகளுக்கு அயல்நாட்டவரை சார்ந்திருக்க வேண்டிய தேவை இல்லாமல், பல்வேறு நாடுகளில் இருந்து இந்தியாவை நோக்கி மருத்துவ சிகிச்சைகளுக்காக மக்கள் தேடி வர தொடங்கியுள்ளனர்.
Follow our Instagram for more Latest Updates
இந்நிலையில், தமிழகத்தில் அவசர மருத்துவ முதுநிலை படிப்பை நாட்டிலேயே முதன்முறையாக தொடங்கியுள்ளனர். முதல்கட்டமாக 23 அரசு மருத்துவ கல்லூரிகளில் இந்த படிப்பு தொடங்கப்பட்டு, இதற்காக, 49 மயக்கவியல் டாக்டர்கள், 10 இதய அறுவை சிகிச்சை டாக்டர்கள், ஆறு வாஸ்குலார் அறுவை சிகிச்சை டாக்டர்கள், ஐந்து பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை டாக்டர்கள், 21 தலைக் காயத்திற்கான சிறப்பு மருத்துவ நிபுணர்கள் போன்ற பணியிடங்கள் உருவாக்கப்பட்டு மருத்துவர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
தீவிரமடைந்த புயல்.. தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – வெளியான தகவல்!
Exams Daily Mobile App Download
நடப்பு ஆண்டில் மொத்தம் 85 அவசர மருத்துவ மேற்படிப்பு இடங்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இனி வரும் காலத்தில் இளநிலை மருத்துவ மாணவர்களுக்கு இந்த அவசர மருத்துவ மேற்படிப்பு கட்டாயமாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த படிப்பை சென்னை ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் அவர்கள் தொடங்கி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.