தமிழகம் முழுவதும் 5.64 லட்சம் தபால் வாக்குகள் பதிவு – தேர்தல் ஆணையர் பேட்டி!
தமிழகத்தில் 5 லட்சத்திற்கும் அதிகமான தபால் ஓட்டுகள் பெறப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் ஆணையாளர் சத்யபிரதா சாஹு தகவல் தெரிவித்துள்ளார். இந்த வாக்குகளும் நாளை எண்ணப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல்:
கடந்த ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் வெற்றி அடைந்தால் மட்டுமே அடுத்த 5 ஆண்டுகளுக்கு தமிழகத்தினை ஆட்சி செய்ய முடியும். இந்த தேர்தலில் பல கட்சிகள் போட்டி போட்டுள்ளன. இப்படியாக இருக்க, கடந்த 6 ஆம் தேதி தமிழகத்தில் 71 சதவீத வாக்குப்பதிவு எந்த வித பிரச்சனையும் இல்லாமல் சுமுகமாக முடிந்தது. அதேபோல் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளையும் சரி வர பின்பற்றி வாக்குப்பதிவு நடைபெற்றது.
புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை – அரியணை ஏறப்போவது யார்?
பொது முடக்கம் இருந்த காரணத்தால் பலர் கொரோனா கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் இருந்து வாக்குகளை பதிவிட வர முடியாமல் போனது. இதனால் தபால் வாக்குகள் பெறப்பட்டது. இதனை அடுத்து நேற்று வரை மொத்தமாக 5.64 லட்சம் தபால் வாக்குகள் பெறப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் ஆணையாளர் சத்யபிரதா சாஹு தகவல் தெரிவித்துள்ளார்.
TN Job “FB Group” Join Now
அதே போல் நாளை நடைபெற உள்ள வாக்கு எண்ணிக்கை மையங்களில் 35 ஆயிரம் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா காலம் என்பதால் தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் நாளை வாக்குகள் எண்ணப்படும் என்றும் தெரிவித்துள்ளார். 2 மணி நேரத்திற்கு ஒரு முறை வாக்கு எண்ணிக்கை மையங்கள் சுத்தம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.