Post Office செல்வமகள் சேமிப்பு திட்ட கணக்கு வைத்திருப்போர் கவனத்திற்கு – புதிய விதிமுறைகள் இதோ!
இந்திய அஞ்சல்துறையில் உள்ள பல்வேறு சேமிப்பு திட்டத்தை தொடர்ந்து பெண் குழந்தைகளின் எதிர்காலத்திற்கு உதவும் வகையில் செல்வமகள் சேமிப்பு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
செல்வமகள் சேமிப்பு திட்டம்:
இந்திய அஞ்சல் துறை அனைத்து மக்களும் பயன்பெறும் வகையில் பல்வேறு வகையான திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. இந்த திட்டங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளது. குறிப்பாக செல்வமகள் சேமிப்பு திட்டம், கிராம சுராக்ஷ யோஜனா, தொடர் வைப்பு நிதி, காப்பீடு திட்டங்கள் போன்ற திட்டங்களில் அதிக அளவிலான மக்கள் சேர்ந்து பயன் பெற்று வருகின்றனர். ரிஸ்க் இல்லாத முதலீடு திட்டத்தில் முதலீடு செய்ய வேண்டும் என்று எண்ணுபவர்களுக்கு அஞ்சலக முதலீடு திட்டங்கள் மிக பொருத்தமானவையாகும்.
ExamsDaily Mobile App Download
மற்ற திட்டங்களை தொடர்ந்து பெண் குழந்தைகளுக்கான சேமிப்பை ஊக்கப்படுத்தவும் எதிர்காலத்திற்கு உதவும் வகையிலும் செல்வமகள் சேமிப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த 2015 ம் ஆண்டு மத்திய அரசால் இத்திட்டம் முதன் கொண்டு வரப்பட்டது. இந்த திட்டத்தில் 10 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளின் பெயரில் கணக்கு தொடங்கலாம். இந்தத் திட்டத்தில் பெண் குழந்தைகளைச் சேர்க்க வயது சான்றாக பிறப்புச் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். குழந்தையின் பெற்றோரோ அல்லது பாதுகாவலரோ சேமிப்பு கணக்கை தொடங்கலாம்.
செல்வமகள் சேமிப்பு திட்டத்தின் புதிய விதிமுறைகள்:
- தற்போது 18 வயதை தாண்டிய பெண்கள் செல்வமகள் சேமிப்பு திட்ட கணக்கை பயன்படுத்தவும், செயல்படுத்தவும் முடியும்.
- செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் ஆண்டுக்கு 250 ரூபாய் கட்டாயம் செலுத்த வேண்டும். அல்லாவிட்டால் கணக்கிற்கு வட்டி கிடைக்காது.
- பெண் இறந்துவிட்டாலோ, கொடிய நோயால் அவதிப்பட்டு வந்தாலோ இக் கணக்கை முடித்து கொள்ளலாம்.
- ஓரு குடும்பத்தில் 2 பெண்களுக்கு மட்டுமே செல்வமகள் சேமிப்புத் திட்டத்தில் முதலீடு செய்யலாம்.
TNPSC Online Classes
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும் To Join => Whatsapp கிளிக் செய்யவும் To Join => Facebook கிளக் செய்யவும் To Join => Telegram Channel கிளிக் செய்யவும்