Post Office ல் மூத்த குடிமக்களுக்கான சூப்பர் திட்டங்கள் – முழு விவரம் இதோ!
சீனியர் சிட்டிசன்கள் குறிப்பாக, 60 வயதை எட்டிய நபர்கள், பங்கு சந்தையில் ஆபத்து இருப்பதால், அதிக வட்டி தரும் சேமிப்பு திட்டங்களை தேடுவார்கள். அந்த வகையில் போஸ்ட் ஆபீஸில் மூத்த குடிமக்களுக்காகவே பல சேமிப்பு திட்டங்கள் உள்ளது. இது குறித்த முழு விவரத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.
சூப்பர் திட்டங்கள்:
இன்றைய காலத்தில் பலருக்கும் இருக்கும் ஆசைகளில் ஒன்றும் இதுவே. இன்று கஷ்டப்பட்டாலும் பரவாயில்லை வயதான காலத்தில் பாதுகாப்பான சேமிப்புடன், மாதம் மாதம் கணிசமான வருவாயும் கிடைக்க வேண்டும் என்பதுதான். அவர்களுக்கு நல்ல தேர்வாக போஸ்ட் ஆபீஸில் மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம், தேசிய ஓய்வூதிய திட்டம் போன்ற பல்வேறு சேமிப்பு திட்டங்கள் நடைமுறையில் உள்ளது.
TN தமிழக 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான மறுகூட்டல் பொதுத்தேர்வு முடிவுகள் – இன்று வெளியீடு !
மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம்:
முதியோர்களுக்கு மிகவும் பாதுகாப்பான திட்டமாக மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் (SCSS) உள்ளது. 60 வயதை எட்டிய இந்தியர்கள், இந்த திட்டத்தில் கணக்கை தொடங்கி முதலீடு செய்யலாம். போஸ்ட் ஆபீஸ் அல்லது வங்கியில் மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தில் முதலீடு செய்தால் நல்ல நிலையான வருமானத்தை பெறலாம். குறைந்தபட்சம் ரூ.1000 முதல் அதிகபட்சமாக ரூபாய் 15 லட்சம் வரை முதலீடு செய்துக்கொள்ளலாம். இத்திட்டத்திற்கு 7.4 சதவீத வட்டி ஒவ்வொரு காலாண்டிற்கும் ஒரு முறை செலுத்தப்படுகிறது. மேலும் இந்த சேமிப்பு திட்டம் முழு வரிக்கு உட்பட்டது.
5 வருட நிலையான சேமிப்பு (FD):
வங்கிகள் மற்றும் தபால் நிலையங்கள் நிலையான வைப்புத்தொகையை வழங்குகின்றன. இந்த சேமிப்பு திட்டத்தின் கீழ், ஒவ்வொரு நிதியாண்டில் ரூ.1,50,000 வரை முதலீடு செய்யலாம். இத்தொகையானது 5 ஆண்டு வரி சேமிப்பு FD ல் மொத்த வருவாயில் இருந்து விலக்கு பெறத் தகுதி பெறுகிறது. இதற்கான வட்டித்தொகையை மாதந்தோறும், காலாண்டு, அரையாண்டு என ஒட்டுமொத்தமாகப் பெறலாம். இந்த வரி சேமிப்புத்திட்டத்தில் 5 ஆண்டுகள் வரை டெபாசிட்டுகளை திரும்ப பெற முடியாது.
Exams Daily Mobile App Download
தேசிய சேமிப்பு சான்றிதழ் திட்டம்:
தேசிய சேமிப்பு சான்றிதழ் என்பது ஒரு நிலையான வருமான முதலீட்டுத் திட்டம் ஆகும். இந்த திட்டத்தை , ஒருவர் எந்த ஒரு வங்கியிலோ அல்லது தபால் நிலையத்திலோ எளிதாகத் திறக்கலாம். இது ஒரு சேமிப்பு பத்திரத் திட்டம், இதன் முதன்மை நோக்கம் என்பது, சிறிய மற்றும் நடுத்தர வருவாய் முதலீட்டாளர்களை, முதலீடு செய்ய வைப்பது தான். இந்த திட்டத்தில் முதலீடு செய்வதற்கு அதிகபட்ச வரம்பு எதுவும் இல்லை ஆனால் பிரிவு 80 C இன் கீழ் வரிச்சலுகை ஒரு நிதியாண்டிற்கு ரூ. 1.5 லட்சம் வரை மட்டுமே செலுத்த முடியும். குறிப்பாக தேசிய சேமிப்பு சான்றிதழ் மூலம் கிடைக்கும் பணத்திற்கு, டிடிஎஸ் இல்லாததால், சந்தாதாரர் தனது வருமான வரி கணக்கை தாக்கல் செய்யும் போது, அதற்கு பொருந்தும் வரியை செலுத்த வேண்டும்.
தேசிய ஓய்வூதிய அமைப்பு:
தேசிய ஓய்வூதிய அமைப்பு குடிமக்களின் ஓய்வு காலத்தை சிறப்பான முறையில் வழி நடத்த சில வசதிகளை செய்து வருகிறது. இது வரி சலுகைகளை வழங்குவதோடு மட்டுமல்லாமல் ஓய்வூதிய மூலதனக் குவிப்பு காலப்போக்கில் ஓய்வூதியத்திற்கான வட்டியை அதிகரிக்கிறது. தேசிய ஓய்வூதிய அமைப்பில் செய்யப்படும் பங்களிப்பு, பிரிவு 80 CCD (1) இன் கீழ் ஒரு நிதியாண்டில் ரூ. 1.5 லட்சம் வரையிலான விலக்கு பெறுவதற்கு தகுதி பெறுவது மட்டுமல்லாமல், பிரிவு 80CCD(1B) இன் கீழ் ஒரு நிதியாண்டில் ரூ. 50,000 வரை கூடுதல் வரி சலுகையும் கிடைக்கும்.