Post Office செல்வமகள் சேமிப்பு திட்ட கணக்கு வைத்திருப்போர் கவனத்திற்கு – தமிழகம் 2வது இடம்!
இந்தியாவில் மத்திய அரசின் செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் 26.03 லட்சம் கணக்குகள் தொடங்கி தேசிய அளவில் தமிழகம் 2வது இடத்தைப் பிடித்துள்ளது.
செல்வமகள்:
இந்தியாவில் வங்கிகளுக்கு இணையாக நல்ல சேமிப்பு திட்டங்கள் அஞ்சலகங்கள் மக்களுக்கு அறிமுகம் படுத்துகின்றனர். வருங்கால வாய்ப்பு நிதி. செல்வமகள் சேமிப்பு திட்டம். காப்பீடு திட்டங்கள் என பல வகை திட்டங்கள் உள்ளது. இதனால் பெரும்பாலான மக்கள் அஞ்சலக சேமிப்பு திட்டத்தில் சேர ஆர்வம் காட்டுகின்றனர். ஒவ்வொரு திட்டங்களும் தனித்தனி விதிமுறைகளையும் கால அளவையும் கொண்டுள்ளது. அதனால் மக்கள் தங்களுக்கு ஏற்ற திட்டத்தில் சேர்ந்து பயன் பெறுகின்றனர். கிராமப்புற மக்கள் அதிகம் அஞ்சலக கணக்கு தொடங்குகின்றனர்.
இந்திய பரிவர்த்தனை கழகத்தில் வேலை – சற்று முன் வெளியானது..!
மற்ற திட்டங்களை தொடர்ந்து பெண் குழந்தைகளை பாதுகாக்கும் பொருட்டு செல்வ மகள் சேமிப்பு திட்டம் மத்திய அரசால் கடந்த 2015ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இரண்டு பெண் குழந்தைகள் உள்ளவர்கள் இத்திட்டத்தில் சேரலாம். இத்திட்டம் பெண் குழந்தைகளுக்கான எதிர்கால திட்டமாக உள்ளது.10 வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தையின் பெற்றோர் தங்கள் குழந்தையின் பேரில் இத்திட்டத்தை தொடங்கலாம். 7.6 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. குழந்தைக்கு 21 வயது நிறைவு பெறும் போது இந்த தொகையை நீங்கள் பெறலாம்.
SSC CGL தேர்வர்கள் கவனத்திற்கு – இலவச ஆன்லைன் வகுப்புகள்..!
இத்திட்டத்தில் 2021-ம் ஆண்டு வரை நாடு முழுவதும் 1.42 கோடி கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. இத்திட்டத்தில் 7.6 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. இதில் உத்தரப்பிரதேசத்தில் 26.03 லட்சம் செல்வ மகள் கணக்கு தொடங்கப்பட்டு அம்மாநிலம் முதலிடத்தில் உள்ளது. 26.03 லட்சம் கணக்குகள் தொடங்கி தமிழகம் இரண்டாம் இடத்திலும் உள்ளதாக அஞ்சல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.