Post Office தேசிய சேமிப்பு சான்றிதழ் திட்டம் – 5 ஆண்டுகளில் 5 லட்ச ரூபாய் கிடைக்கும்!
மக்களிடையே சேமிப்பு பழக்கத்தை ஏற்படுத்த அஞ்சலகத்தில் பல திட்டங்கள் அமல்படுத்தப்பட்டு வருகிறது. அதனை தொடர்ந்து தேசிய சேமிப்பு சான்றிதழ் திட்டம் நடைமுறையில் உள்ளது. இது குறித்த விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
சேமிப்பு திட்டம்:
இன்றைய கால கட்டத்தில் சேமிப்பு என்பது முக்கியமான ஒன்றாகும். நாளுக்கு நாள் அதிகரித்து வரும் விலையேற்றத்தை சமாளிப்பதே பெரிய விஷயமாக இருக்கும் பட்சத்தில் சேமிப்பு என்பது கேள்விக்குறியாகியுள்ளது. இந்நிலையில் சேமிப்பு பழக்கத்தை மக்களிடையே கொண்டு வர வங்கிகள் மற்றும் அஞ்சல் துறையில் பல்வேறு சேமிப்பு திட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளது. அஞ்சலகத்தில் இயங்கி வரும் செல்வமகள் போன்ற சேமிப்பு திட்டங்கள் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன.
தமிழகத்தின் இம்மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – கலெக்டர் அறிவிப்பு!
அதே போன்ற ஒரு சேமிப்பு திட்டம் தான் தேசிய சேமிப்பு சான்றிதழ் திட்டம். இந்த திட்டத்திற்கான மெச்சூரிட்டி காலம் 5 ஆண்டுகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பயனர்களின் விருப்பத்தின் அடிப்படையில் கூடுதலாக 5 ஆண்டுகளுக்கு இந்த திட்டத்தை நீட்டித்துக் கொள்ள முடியும். பயனர்கள் வெறும் ரூ.100 கொண்டு கூட இந்த திட்டத்தில் இணைந்து கொள்ள முடியும். மேலும் இந்த திட்டத்தில் உச்சவரம்பு என்று ஏதும் குறிப்பிடப்படவில்லை. மேலும் இந்த திட்டத்தில் வரி விதிவிலக்கு வழங்கப்படுகிறது.
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு நவ.5ம் தேதி தீபாவளி விடுமுறை – அறிவிப்பு வெளியீடு!
பயனர்களுக்கு இந்த திட்டத்தில் 6.8% வட்டி வழங்கப்படுகிறது. பயனர்கள் 15 லட்சம் முதலீடு செய்யும் பட்சத்தில் அவர்களுக்கு 5 ஆண்டுகள் முடிவில் வட்டியுடன் சேர்த்து உங்களுக்கு ரூ. 20.85 லட்சம் வழங்கப்படும். இதில் பயனர்கள் ரூ 100, ரூ 500, ரூ 1000, ரூ 5000 மற்றும் ரூ 10,000 மதிப்புள்ள என்எஸ்சி சான்றிதழ்களை வாங்க வேண்டும். பல சான்றிதழ்களை வெவ்வேறு விலையில் வாங்குவது மூலம் முதலீடு செய்ய முடியும். இதற்கான வட்டி விகிதம் வருடத்திற்கு ஒரு முறை வழங்கப்படும். அதை பயனர்கள் மெச்சூரிட்டி யின் போது பெற்றுக்கொள்ளலாம்.