Post Office சேமிப்பு கணக்குதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு – வைப்பு தொகை உச்சவரம்பு உயர்வு!
இந்தியாவில் இன்று (பிப்.01) 2023 – 2024 ஆம் தேதி ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதில் அஞ்சல் துறை குறித்த அறிவிப்புகள் இடம் பெற்றது. இதனையடுத்து சில சேமிப்பு திட்டங்களில் புதிய மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.
சேமிப்பு திட்டங்கள்:
இந்திய அஞ்சல் துறை ஏழை எளிய மக்களுக்கு உதவும் வகையில் பல்வேறு சேமிப்பு திட்டங்களை அறிமுகப்படுத்தி உள்ளது. இத்தகைய திட்டங்கள் மக்கள் மத்தியில் சேமிக்கும் பழக்கத்தை ஊக்குவித்து வருகிறது. அண்மையில் ரெப்போ வட்டி விகிதம் உயர்த்தப்பட்டதை அடுத்து சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் வெகுவாக உயர்ந்தது.
தமிழகத்தில் காலாவதி வாகன சட்டம் அமல்? போக்குவரத்து துறை அதிகாரிகள் வெளியிட்ட தகவல்!!
Follow our Instagram for more Latest Updates
இந்த நிலையில் இன்று தாக்கல் செய்யப்பட்ட 2023 – 2024 ஆம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டில் அஞ்சல் துறை திட்டங்கள் குறித்த முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி மாதாந்திர வருமானத் திட்டத்திற்கு வைப்புத் தொகை வரம்பு உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது ஒன்பது லட்சமாக இருந்தது 15 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து மூத்த குடிமக்களுக்கான சேமிப்புத் திட்டத்தில் உச்சபட்ச வைப்பு வரம்பு 30 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
இத்திட்டத்தில் வழங்கப்பட்டு வரும் 7.4% வட்டி தொடர்ந்து நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 1 முதல் 5 ஆண்டுகளுக்கான முதலீட்டு கணக்குகளுக்கு வட்டி விகிதம் 5.5 முதல் 6.7 சதவீதம் வரை வட்டி அளிக்கப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார். அதனை தொடர்ந்து பெண்களுக்கு மகிளா சம்மன் சேமிப்பு சான்றிதழ் என்ற புதிய சிறு சேமிப்பு திட்டம் தொடங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.