Post Office இல் சூப்பர் சேமிப்பு திட்டம் – ரூ.5 லட்சம் முதலீடு செய்தால் 6.94 லட்சமாக மாறும்! முழு விபரம் இதோ!
இந்திய அஞ்சல் துறை பல்வேறு சேமிப்பு திட்டங்களை வழங்கி வருகிறது. இதில் தற்போது பிரதமர் மோடி அவர்கள் முதலீடு செய்துள்ள ஒரு சேமிப்பு திட்டத்தை பற்றி விரிவாக பார்க்கலாம்.
சேமிப்பு திட்டம்
தற்போது கொரோனா பெருந்தொற்றின் காரணமாக பொதுமக்கள் பொருளாதார இழப்புகளை சந்தித்து வருகின்றன. இதனால் பொதுமக்கள் தொடர்ந்து வருவாயை பெற பாதுகாப்பான முதலீட்டில் கவனம் செலுத்த தொடங்கின. தற்போது இந்திய அஞ்சல் துறை பல்வேறு சேமிப்பு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. இத்திட்டங்களில் இணைவதன் மூலமாக பாதுகாப்பான முறையில் நல்ல லாபம் பெற முடியும். இதில் தற்போது தேசிய சேமிப்பு சான்றிதழ் திட்டம் பற்றி விரிவாக பார்க்கலாம். இத்திட்டத்தில் பிரதமர் மோடி அவர்கள் முதலீடு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
TNPSC குரூப் 4 தேர்வுக்கு தயாராவோர் கவனத்திற்கு – எப்படி படிப்பது? முழு விபரம் இதோ!
இத்திட்டத்தின் lock-in காலம் 5 ஆண்டுகள் வரை ஆகும். இந்த 5 ஆண்டுகள் வரை பணத்தை எடுக்க முடியாது. இத்திட்டத்தில் தனிநபர் கணக்கு மற்றும் கூட்டு கணக்கை தொடங்க முடியும். மேலும் தேசிய சேமிப்பு சான்றிதழ் திட்டத்தில் ஆண்டுக்கு 6.8% வட்டி கிடைக்கிறது. இதில் ரூ.1000 முதலீடு செய்தால் 5 ஆண்டுகளின் முடிவில் ரூ.1359.49 ரூபாய் கிடைக்கிறது. அதன்படி ரூ.1 லட்ச ரூபாய் முதலீடு செய்தால் 5 ஆண்டுகளின் முடிவில் ரூ.1.38 லட்ச ரூபாய் கிடைக்கிறது. இத்திட்டத்தில் அதிகபட்சமாக முதலீடு செய்ய எந்தவொரு வரம்பும் இல்லை.
2022ம் ஆண்டில் ஐடி துறையில் 3.75 லட்சம் வேலைவாய்ப்புகள் – டிஜிட்டல் நிறுவன ரிப்போர்ட்!
அதன்படி ரூ.5 லட்ச ரூபாய் முதலீடு செய்தால் 5 ஆண்டுகளின் முடிவில் ரூ.6.94 லட்ச ரூபாய் வரை கிடைக்கிறது. ஒவ்வொரு ஆண்டுக்கும் கூட்டு வட்டி கணக்கிடப்பட்டு மெச்சூரிட்டி காலம் முடியும் போது முதலீட்டாளர்களிடம் வழங்கப்படுகிறது. இதனால் சிறு மற்றும் நடுத்தர சேமிப்புகளுக்கு தேசிய சேமிப்பு சான்றிதழ் திட்டத்தில் இணைந்து பயன் பெற்று கொள்ளலாம். குறைந்தபட்ச முதலீடாக ரூ.1000 முதல் செலுத்தலாம் என்பதால் நடுத்தரவர்க்கத்தை சேர்ந்த மக்கள் மத்தியில் தேசிய சேமிப்பு சான்றிதழ் திட்டம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.