Post Office சேமிப்பு திட்டங்கள் ரூ.100 இருந்தால் போதும் கணக்கு தொடங்கலாம் – விவரங்கள் இதோ!
இந்திய அஞ்சல் துறையில் உள்ள சேமிப்பு திட்டங்கள், அதன் இருப்புத்தொகை மற்றும் பிற விவரங்கள் குறித்து இப்பதிவில் காண்போம். அஞ்சலகத்தில் கணக்கு தொடர நினைப்பவர்களுக்கு இந்த பதிவு பயனுள்ளதாக இருக்கும்.
அஞ்சல் துறை:
அஞ்சத்துறை மக்களுக்கு சிறந்த சேமிப்பு திட்டங்களை அறிமுகப்படுத்தி அதை செயல்படுத்தியும் வருகிறது. ரிஸ்க் இல்லாமல் பாதுகாப்புக்காக முதலீடு செய்ய நினைப்பவர்களுக்கு அஞ்சலகத் திட்டங்கள் கை கொடுக்கும். வைப்பு நிதி, தொடர் வைப்பு கணக்கு, கால வைப்புக் கணக்கு, முதியோருக்கான சேமிப்புத் திட்டம், மாதாந்திர வருமானத் திட்டம், செல்வ மகள் திட்டம், போன்ற திட்டங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் சேமிப்பு செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சாமானிய மக்கள் மற்றும் கிராமபுற மக்கள் அஞ்சலக சேமிப்பு திட்டங்களின் சேர ஆர்வம் காட்டுகின்றனர்.
PG TRB போட்டித்தேர்வுகள் ஒத்திவைப்பு – கொரோனா பெருந்தொற்று பரவல் எதிரொலி!
போஸ்ட் ஆபீஸில் கணக்கு தொடங்க வேண்டும் என நினைப்பவர்கள் கையில் ரூ.500 இருந்தாலே போதும் எளிதாக கணக்கு தொடங்கலாம். தற்போது ஆன்லைன் மூலமாகவும் எளிதாக கணக்கு தொடங்கும் வசதி உள்ளது. மற்ற திட்டங்களை தொடர்ந்து தேசிய சேமிப்பு தொடர் வைப்பு நிதி திட்டம். இந்த சேமிப்பை தொடங்க ரூ.100 இருந்தால் போதும். மேலும் வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் ரூ.500 செலுத்தி கணக்கை தொடங்கலாம். பெண் குழந்தைகளுக்கான சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டத்தின் குறைந்த பட்சம் இருப்பு தொகை ரூ.250 ஆகும்.
தமிழகத்தில் 10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மீண்டும் விடுமுறை? பள்ளிக் கல்வித்துறை ஆலோசனை!
தேசிய சேமிப்பு பத்திர திட்டத்தில் ரூ.1000 செலுத்தி கணக்கு தொடங்கலாம். அடுத்ததாக மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தில் ரூ.1000 இருந்தால் போதும் எளிதாக சேரலாம் அடுத்து, தேசிய சேமிப்பு பத்திர திட்டம் இருக்கிறது. இதில் ரூ.1000 முதல் முதலீடு செய்யலாம். இறுதியாக கிசான் விகாஸ் பத்திரம் இதில் ரூ.1000 இருந்தாலே போதும் கணக்கை தொடங்க முடியும். இந்த அனைத்து சேமிப்பு திட்டங்களும் மக்களுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.