Post Office இல் மாதம் ரூ.1000 சேமித்து 5 லட்ச ரூபாய் வரை ரிட்டன்ஸ் – சூப்பரான சேமிப்பு திட்டம்!
இந்தியாவில் பெண் குழந்தைகளுக்கு உதவும் வகையில் அஞ்சல் துறை சார்பாக செல்வமகள் சேமிப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 2 பெண் குழந்தைகள் வைத்திருப்பவர்கள் இத்திட்டத்தில் சேர்ந்து பயன் பெறலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
செல்வ மகள் சேமிப்பு திட்டம்:
இந்தியாவில் பெண் குழந்தைகளை பாதுகாக்கும் பொருட்டு பல்வேறு நல திட்டங்களை மத்திய மாநில அரசுகள் செயல்படுத்தி வருகிறது. அதனை தொடர்ந்து அஞ்சல் துறையும் பெண் குழந்தைகளுக்கென புதிய சேமிப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. அது தான் செல்வ மகள் சேமிப்பு திட்டம். இந்த செல்வ மகள் சேமிப்பு திட்டம் மத்திய அரசால் கடந்த 2015ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் அதிகபட்சமாக 2 பெண் குழந்தைகள் உள்ள பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் பேரில் இத்திட்டத்தை தொடங்கலாம். இக் கணக்கை தொடங்க குறைந்தபட்சம் ரூபாய் 250 செலுத்த வேண்டும். மேலும் 1,50,000 வைப்பு தொகை செலுத்தலாம்.
மாநிலத்தில் மீண்டும் இரவு ஊரடங்கு அமல்? அரசு விளக்கம்!
இத்திட்டம் பெண் குழந்தைகளுக்கான எதிர்கால சேமிப்பு திட்டமாக உள்ளது.10 வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தையின் பெற்றோர் தங்கள் குழந்தையின் பேரில் இக்கணக்கை தொடங்கலாம். அஞ்சலகத்தில் உள்ள மற்ற சேமிப்பு திட்டங்களை காட்டிலும் இந்த செல்வ மகள் சேமிப்பு திட்டத்தில் அதிக வட்டித்தொகை செலுத்தப்படுகிறது. அதன்படி நீங்கள் சேமிக்கும் தொகைக்கு ஆண்டுக்கு 7.6% வட்டி வழங்கப்படுகிறது. மேலும் இத்திட்டத்தில் தொகையை 50% ஆக இரண்டு முறை பெற்று கொள்ளலாம்.
அதன்படி 50% தொகையை குழந்தையின் மேற்படிப்பிற்காக பெற்று கொள்ளலாம். மீதம் 50% தொகையை அக்குழந்தையின் திருமணத்தின் போது அல்லது 21 வயது பூர்த்தி அடைந்தவுடன் பெற்று கொள்ளலாம். இத்திட்டத்தின் முதிர்வுத் தொகைக்கு வரி விலக்கு சலுகையும் உண்டு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பிறந்த குழந்தை முதல் 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் பெயரில் சேமிக்கலாம். மாதம் ஒருவர் ரூ.1000 சேமித்து வந்தால், திட்டம் முதிர்வு காலத்தை எட்டியவுடன் வட்டியுடன் சேர்த்து ரூ.5.09 லட்சம் வரை பெறலாம். அதனால் பெண் குழந்தை வைத்துள்ளவர்கள் இத்திட்டத்தில் சேர்ந்து பயன் பெறலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.