Post Office இல் சிறந்த சேமிப்பு திட்டம் – தினசரி ரூ.417 முதலீட்டில் ரூ.22.50 லட்சம் ரிட்டன்ஸ்!
அஞ்சலகத்தின் சிறு சேமிப்பான பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தின் வட்டி பலன்கள், முதலீட்டு தொகை குறித்த விவரங்களை பற்றி இப்பதிவில் காண்போம்.
சேமிப்பு திட்டம்:
இந்தியாவில் அஞ்சல் நிலைய சேமிப்பு கணக்குகள் மக்களிடம் நம்பக தன்மையை பெற்றுள்ளது. அஞ்சலங்கள் வங்கிகளை போன்று பொது மக்களின் சேமிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்க பல முதலீட்டு திட்டங்களை வழங்கி வருகிறது. அஞ்சல் நிலையங்களில் மக்களுக்கு பயன் அளிக்கும் வகையில் சிறந்த சேமிப்பு திட்டங்கள் உள்ளது. வைப்பு நிதி, தொடர் வைப்பு கணக்கு, கால வைப்புக் கணக்கு, முதியோருக்கான சேமிப்புத் திட்டம், மாதாந்திர வருமானத் திட்டம் என அஞ்சலகங்களில் பல்வேறு சேமிப்பு திட்டங்கள் உள்ளது.
‘நாம் இருவர் நமக்கு இருவர்’ சீரியலில் இருந்து நடிகர் செந்தில் விலகல்? ரசிகர்கள் அதிர்ச்சி!
ஒவ்வொரு திட்டத்திற்கு தனித்தனி விதிமுறைகளும் வட்டி விகிதங்களும் உள்ளது. சிறு சேமிப்பு திட்டங்களில் வழங்கப்படும் வட்டி தொகை அவர்களின் அஞ்சல் கணக்கில் வரவு வைக்கப்படும். மற்ற திட்டங்களை தொடர்ந்து அஞ்சலகத்தில் பொது வருங்கால வைப்பு நிதி திட்டமும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. திட்டத்தில் 417 ரூபாய் தினமும் சேமித்து முதலீடு செய்வதன் மூலம் மாதம் 12500 ரூபாய் முதலீடு செய்யலாம். பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தின் முதிர்வு காலம் 15 ஆண்டுகள் ஆகும்.
“பாரதி கண்ணம்மா” சீரியலில் இருந்து விலகிய பின் ரோஷினி வெளியிட்ட வீடியோ – ரசிகர்கள் வாழ்த்து!
அதன்படி ஆண்டும் 1.5 லட்சம் ரூபாய் சேமித்து மொத்தம் 22.50 லட்சம் ரூபாய் முதலீடு செய்யலாம். இந்த திட்டத்துக்கு 7.1% வட்டி கிடைக்கிறது. இதில் கூட்டு வட்டியின் பலன் மூலம் வட்டி வருமானம் மட்டுமே 18.18 லட்சம் ரூபாய் கிடைக்கும். மொத்தமாக முதலீடு செய்த தொகை 22.50 லட்சம் ரூபாய். வட்டி வருமானம் மூலம் கிடைப்பது 18.18 லட்சம் ரூபாய். மெச்சூரிட்டியின் போது மொத்தமாக நம் கையில் கிடைப்பது 40.68 லட்சம் ரூபாய். உங்கள் தேவைக்கு ஏற்ப முதலீட்டுத் தொகையை நீங்கள் நிர்ணயிக்கலாம்.