Post Office இல் குழந்தைகளின் கல்வி செலவுக்காக சேமிக்கும் பெற்றோர்கள் கவனத்திற்கு – சூப்பர் திட்டம்!

0
Post Office இல் குழந்தைகளின் கல்வி செலவுக்காக சேமிக்கும் பெற்றோர்கள் கவனத்திற்கு - சூப்பர் திட்டம்!
Post Office இல் குழந்தைகளின் கல்வி செலவுக்காக சேமிக்கும் பெற்றோர்கள் கவனத்திற்கு - சூப்பர் திட்டம்!
Post Office இல் குழந்தைகளின் கல்வி செலவுக்காக சேமிக்கும் பெற்றோர்கள் கவனத்திற்கு – சூப்பர் திட்டம்!

அஞ்சல் துறையில் அதிக வட்டி மற்றும் வருமானம் தரும் சேமிப்பு திட்டங்கள் ஏராளமாக உள்ளன. இதனால் பணத்திற்கு முழு பாதுகாப்பு கிடைக்கிறது. அதிலும் குறிப்பாக மாதாந்திர வருமான திட்டம் என்பது பணத்தை பாதுகாப்பாக முதலீடு செய்வதற்கான மிக சிறந்த வழியாகும்.

மாதாந்திர வருமான திட்டம்

கொரோனா கால கட்டத்தில் பொதுமக்கள் பல்வேறு இழப்புகளை சந்தித்து வருகின்றனர். அதனால் பாதுகாப்பு நடவடிக்கையாக தங்கள் முதலீடுகளை அஞ்சல் அலுவலகத்தில் உள்ள சேமிப்பு திட்டங்களில் தங்கள் பணத்தை செலுத்த தொடங்கினர். மேலும் அஞ்சல் துறையில் அதிக வட்டி மற்றும் அதிக வருமானம் தரும் சேமிப்பு திட்டங்கள் ஏராளமாக உள்ளன. அதிலும் மாதாந்திர வருமான திட்டம் என்பது பணத்தை பாதுகாப்பான முறையில் முதலீடு செய்வதற்கு வழிவகை செய்கிறது. அத்துடன் இத்திட்டத்தில் 10 வயது குழந்தைகளின் பெயரில் கூட கணக்கை தொடங்க முடியும்.

ATM கார்டு பயன்படுத்தி ஷாப்பிங் செய்வோர் கவனத்திற்கு – ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு!

இத்திட்டத்தின் மூலமாக மாதந்தோறும் வருவாயை பெற்று குழந்தைகளின் கல்வி செலவினங்களை எதிர்கொள்ள முடியும். இதனால் பெற்றோர்கள் அனைவரும் இத்திட்டத்தில் அதிகளவு பயன் அடைகின்றனர். இந்த திட்டத்தில் குறைந்தபட்சமாக ரூ.1000 முதல் அதிகபட்சமாக ரூ. 4.5 லட்சம் வரை முதலீடாகவும் செலுத்த முடியும். இத்திட்டத்தின் மூலமாக கூட்டு கணக்கில் சேமிக்க முடியும். அவ்வாறு கூட்டு கணக்கில் சேமித்தால் அதிகபட்சமாக ரூ.9 லட்சம் வரை சேமிக்க முடியும். மாதாந்திர வருமான திட்டத்தின் மூலம் கிடைக்கும் வட்டிக்கு வரி உண்டு.

இன்று முதல் டிச.22ம் தேதி வரை 144 தடை உத்தரவு நீட்டிப்பு – மாநில அரசு அறிவிப்பு!

இத்திட்டத்தில் இணைவதால் ஆண்டுக்கு 6.6% வட்டி விகிதம் கிடைக்கிறது. அத்துடன் இதன் மெச்சூரிட்டி காலம் 5 ஆண்டுகள் ஆகும். இதில் ரூ. 2 லட்சம் முதலீடு செய்தால் மாதந்தோறும் ரூ.1100 வட்டி தொகையை பெற முடியும். மேலும் 5 ஆண்டுகள் முடிவில் கிடைக்கும் வட்டி தொகை ரூ.66000 வரை கிடைக்கும். இவ்வாறாக முதலீடு தொகையை பொறுத்து வட்டி தொகை மாறுபடுகிறது. மாதந்தோறும் வட்டித் தொகையை எடுக்காவிட்டாலும் கூடுதல் வட்டி வழங்கப்பட மாட்டாது. ஆகவே குழந்தைகளின் கல்வி செலவுகளுக்கு சேமிக்கும் பெற்றோர்கள் இத்திட்டத்தில் இணைந்து பயன் அடையலாம்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!