சுலபமாக ரூ.25 லட்சம் சேமிக்க மத்திய அரசின் சூப்பர் திட்டம் – பயன்பெறுவது எப்படி? தெரிஞ்சுக்கலாம் வாங்க!
அஞ்சல் நிலையத்தின் மூலம் சேமிக்க கூடிய பல திட்டங்கள் தற்போது மக்கள் மத்தியில் மிக அதிக வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் ரூ.25 லட்சம் சேமிக்க உதவும் எளிய திட்டம் குறித்து இப்பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
சேமிப்பு திட்டம்:
சேமிப்பின் அவசியத்தை மக்களுக்கு உணர வைத்தது கொரோனா பெருந்தொற்று கால ஊரடங்கு தான். வசதி படைத்தவர்கள் முதல் ஏழைகள் வரை அனைவரையும் வதைத்து, பொருளாதாரத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அதன்பிறகு பலரும் மிகவும் பாதுகாப்பான மற்றும் அதிக பலன்கள் உடைய போஸ்ட் ஆபிஸின் சேமிப்பு திட்டங்களை நோக்கி படையெடுக்க தொடங்கினர். அந்த வகையில் பொது வருங்கால வைப்பு நிதி (PPF) திட்டம் தான் மிகவும் சிறப்பான பலன்களை வழங்கி வருகிறது.
தமிழகத்தில் மின்சார வாகன விலை 15% உயர்வு – புதிய கொள்கை எப்போது வெளியாகும்?
Follow our Instagram for more Latest Updates
அந்த வகையில் பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் தினமும் ரூ.100 சேமிப்பதன் மூலம், 1 ஆண்டிற்கு நீங்கள் ரூ. 36,500 சேமிக்கலாம். இத்திட்டத்தின் முதிர்வு காலம் 15 ஆண்டுகள், விருப்பமுள்ளவர்கள் அதன்பிறகு 5 ஆண்டுகள் முதிர்வு காலத்தை அதிகரித்துக் கொள்ளலாம். மேலும், 7.1 % வட்டி விகிதம் இத்திட்டத்தின் தொகைக்கு அளிக்கப்படுகிறது. இதனால் 15 வருட முடிவில் உங்களுக்கு ரூ.9.89 லட்சம் தொகை கைக்கு கிடைக்கும். 25 ஆண்டு கழித்து ஓய்வு பெரும் போது ரூ.25 லட்சம் உங்களுக்கு கிடைக்கும். ஆனால் அதற்காக நீங்கள் ரூ.9,12,500 ஐ வைப்பு நிதியாக செலுத்த வேண்டியதிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.