Post Office அனைத்து வாடிக்கையாளர்களின் கவனத்திற்கு – முக்கிய அப்டேட்! முழு விபரம் இதோ!
இந்திய அஞ்சல் துறை சமீபத்தில் ,சாதாரண சேமிப்பு கணக்கு தொடங்கி எந்த விதமான முதலீடு கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அப்டேட் குறித்த அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.
முக்கிய அப்டேட் :
மத்திய அரசின் போஸ்ட் ஆபீஸ் சேமிப்பு திட்டங்கள் தான் சேமிப்பின் முதல் தேர்வாக உள்ளது. எனவே பொதுமக்கள் அனைவரும் சேமிப்பின் முக்கியத்துவத்தை உணர்ந்து அஞ்சல் நிலைய சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்து வருகின்றனர். இந்த வகையில் அஞ்சல் நிலைய சேமிப்பு திட்டத்திற்கு வட்டி, வங்கிகளை விட அதிகமாக கிடைக்கிறது மற்றும் பணத்திற்கு பாதுகாப்பு மற்றும் அரசு அறிமுகப்படுத்திய சிறு சேமிப்பு திட்டங்கள் என்பவை ஆகும். பெண் பிள்ளைகளுக்கு தனி சேமிப்பு திட்டம், ஆண் குழந்தைகளுக்கான சேமிப்பு திட்டம், கணவன் மனைவிகளுக்கான ஜாயிண்ட் அக்கவுண்ட் என அஞ்சல் சேமிப்பில் இருக்கும் பல சேமிப்பு திட்டங்கள் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.
இந்திய அஞ்சல் துறை,சேமிப்பு கணக்கு மற்றும் அனைத்து விதமான கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு சில முக்கிய அப்டேட் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
1.அஞ்சல் நிலையத்தில் அனைத்து திட்டங்களில் கணக்கை-ஐ முடித்துக் கொள்ளும்போது கணக்கு புத்தகத்தை கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும்.
2.போஸ்ட் ஆபீஸில் செயல்பாட்டில் இருக்கும் எந்த ஒரு அக்கவுண்ட் என்றாலும், அது நிறைவுபெறும் போது வாடிக்கையாளர்கள் தங்களது கணக்கு புத்தகத்தை கட்டாயம் ஒப்படைக்க வேண்டும்.
மாநிலத்தில் மீண்டும் இரவு ஊரடங்கு அமல்? முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் – அரசின் அறிவிப்புகள்!
3.அக்கவுண்ட் மூடப்படுவது குறித்த தகவலை சரிபார்த்த பிறகு, ‘கணக்கு நிறைவு அறிக்கை’ தயார் செய்யப்பட்டு, வாடிக்கையாளருக்கு பிரிண்ட் எடுத்துக் கொடுக்கப்படும். மேலும் வாடிக்கையாளர் அக்கவுண்ட் ஸ்டேட்மென்ட் வேண்டும் என்று கூறினாலும்.எந்தவித கட்டணமும் இல்லாமல் செய்து தரப்படும்.
4.இதனை தொடர்ந்து போஸ்ட் ஆபீஸில் சாதாரண சேமிப்பு கணக்கு முதல் எந்த விதமான முதலீடு கணக்கு வைத்திருப்பவர்கள்,தங்களது பான் எண், மொபைல் நம்பரை அந்த கணக்குடன் இணைக்க வேண்டும்.
5.மேலும் ரூ.50,000 அல்லது அதற்கு மேற்பட்ட பரிவர்த்தனைகளுக்கு பான் கார்டு சரிபார்க்கப்பட வேண்டும் . மேலும் ரூ.20,000க்கு மேல் பணம் அனுப்பும்போது, பெறும்போதும் மொபைல் நம்பரை சரிபார்க்க வேண்டும்.