Post Office செல்வமகள் சேமிப்பு திட்ட கணக்கு வைத்திருப்போர் கவனத்திற்கு – வட்டி விகித விபரம் இதோ!
இந்திய அஞ்சல் துறையில் பல்வேறு வகையான சேமிப்பு திட்டங்கள் உள்ளது. இதில் உள்ள முக்கிய மூன்று திட்டங்களின் வட்டி விகிதம் குறித்து மத்திய அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. இது குறித்து இப்பதிவில் காண்போம்.
சேமிப்பு திட்டம்:
இந்தியாவில் தற்போது மக்கள் வங்கிகளை போல அஞ்சலகத்திலும் கணக்கு தொடங்கி வருகின்றனர். ஏனெனில் வங்கியை விட சிறந்த லாபத்தை அஞ்சலக சேமிப்பு திட்டங்கள் மக்களுக்கு வழங்குகிறது. மேலும் அஞ்சலகத்தில் வழங்கப்படும் சேமிப்பு திட்டங்கள் மக்களுக்கு பயனுள்ளதாகவும் இருந்து வருகிறது. இந்த வட்டி விகிதம் ஒவ்வொரு திட்டத்திற்கு ஏற்ப மாறுபடுகிறது. மேலும் அஞ்சலகத்தில் உள்ள செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் மற்ற திட்டங்களை விட கூடுதல் வட்டித்தொகை கிடைக்கிறது. அதனால் மக்கள் அஞ்சலக சேமிப்பு திட்டங்களில் சேர ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இந்த நிலையில் ஏப்ரல்1-ம் தேதி முதல் ஜூன் 30 வரையிலான சிறு சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி குறித்த அறிக்கையை மத்திய அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில் சிறு சேமிப்புத் திட்டங்களுக்கு கடந்த நிதியாண்டின் 4-வது காலாண்டில் தொடர்ந்து அதே வட்டி வீதம் நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டிலும் தொடரும் என்று தெரிவிக்கப்பட்டது. அதாவது தற்போது உள்ள தேசிய சேமிப்புப் பத்திரத்திற்கான திட்டத்தில் வட்டி 6.8 சதவீதமாகவும், மூத்த குடிமக்களுக்கான சேமிப்புத் திட்டத்தில் வட்டி 7.4 சதவீதமாகவும் தொடரும்.
அதே போல செல்வமகள் திட்டத்தில் 7.6 சதவீதம் வட்டி டெபாசிட்களுக்கு வட்டி 6.7 சதவீதமாகவும் மாத வருமானத் திட்டத்திற்கு வட்டி 6.6 சதவீதமாகவும், 5 ஆண்டுக்கான ரெக்கரிங் டெபாசிட்களுக்கு வட்டி 5.8 சதவீதமாகவும் தொடரும் பிஎப் திட்டத்தில் 8.50 சதவீத வட்டியை 8.10 சதவீதமாக குறைந்த பண வீக்கத்தின் காலமாக இத்தகைய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக கூறப்பட்டது. தற்போது 4-வது காலாண்டில் கடைபிடிக்கப்பட்ட அதே வட்டி வீதம் தொடரும் என்று ,மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.