Post Office மற்றும் Bank இல் உள்ள சேமிப்பு திட்டங்கள் – வட்டி விகிதங்களின் முழு விவரம்!
கொரோனா கால கட்டத்திற்கு பிறகு பொதுமக்கள் பணத்தை சேமிப்பதற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர். அதனால் தங்களின் பணத்தை பாதுகாப்பான முறையில் சேமிக்கத் தொடங்கியுள்ளனர். அதன்படி அஞ்சல் அலுவலகத்திலும் மற்றும் வங்கிகளிலும் அதிகளவு முதலீடு செய்து வருகின்றனர். தற்போது வங்கி மற்றும் அஞ்சல் அலுவலகங்களில் சேமிப்பு திட்டத்தில் வழங்கப்படும் வட்டி விகிதங்களை பற்றி விரிவாக பார்ப்போம்.
சேமிப்பு திட்டங்கள்
இந்தியாவில் கொரோனா காரணமாக பொதுமக்கள் பெரும் பொருளாதார நெருக்கடி நிலையை சந்தித்து வந்தனர். அதனால் தங்கள் பணத்தை பாதுகாப்பான முதலீட்டில் செலுத்தத் தொடங்கியுள்ளனர். தற்போது வங்கி மற்றும் அஞ்சல் அலுவலகங்களில் உள்ள சேமிப்பு திட்டத்தில் பெரும்பாலானோர் கணக்கை தொடங்கியுள்ளனர். மேலும் இதில் அஞ்சலக சேமிப்பு திட்டத்தில் வங்கிகளை காட்டிலும் இரட்டிப்பு லாபங்கள் கிடைப்பதால் பொதுமக்கள் அதிகளவு இதில் இணைகின்றனர். அத்துடன் அஞ்சல் அலுவலகம் மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் செயல்படுவதால் பணத்திற்கு முழு பாதுகாப்பும் கிடைக்கிறது.
TNPSC குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க உள்ளவர்கள் கவனத்திற்கு – முழு விவரம் இதோ!
மேலும் தற்போது அஞ்சல் அலுவலகத்தில் உள்ள சேமிப்பு திட்டத்தில் வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளதால் அதிக வருவாய் கிடைக்கிறது. இதில் டைம் டெபாசிட் திட்டத்தில் 1 முதல் 3 ஆண்டுகளுக்கு 5.5% வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. இதில் 5 ஆண்டுகளுக்கு 6.7% வட்டியும் வழங்கப்படுகிறது. ரெக்கரிங் டெபாசிட் திட்டத்தில் 5.8% வட்டி விகிதம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து பொது வருங்கால வைப்பு நிதி, சுகன்யா சம்ரிதி கணக்கு மற்றும் மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் உள்ளிட்டவைகளில் 7.1%, 7.6% மற்றும் 7.4 % வட்டி விகிதம் வழங்கப்படுகிறது.
இதே போல் பல்வேறு தனியார் நிறுவன வங்கிகளிலும் வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது. இதில் குறிப்பாக HDFC வங்கி ஃபிக்சட் டெப்பாசிட்களில் ரூ. 2 கோடிக்கு கீழ் முதலீடு செய்தால் 5.1 முதல் 5.6% வரை வட்டி வழங்கப்படுகிறது. இதில் பெண்கள், வயதானவர்களுக்கு வட்டி விகிதம் மாறுபடுகிறது. இதனை தொடர்ந்து ஆக்சிஸ் வங்கியிலும் சேமிப்பு திட்டத்துக்கான வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது. இதில் ரூ.2 கோடிக்கு மேற்பட்ட டெபாசிட்டுகளுக்கு 4.45 முதல் 4.65 சதவீத வட்டி வழங்கப்படுகிறது. அதனால் வாடிக்கையாளர்கள் அதிகளவு இதில் முதலீடு செய்கின்றனர்.