Post Office தினமும் ரூ.95 சேமித்தால் ரூ.14 லட்சம் வரை ரிட்டன்ஸ் – கிராம சுமங்கல் யோஜனா திட்டம்!
தபால் நிலையங்களில் வருமானம் அதிகம் தரும் பல ஆயுள் காப்பீட்டுத் திட்டங்கள் உள்ளன. இந்த திட்டங்களில் ஒன்று கிராம சுமங்கல் யோஜனா திட்டம். இந்த திட்டத்தில் தினமும் ரூ. 95 சேமித்தால் , 14 லட்சம் வரை சம்பாதிக்கலாம். இது குறித்து இப்பதிவில் பார்க்கலாம்.
சுமங்கல் யோஜனா திட்டம்:
இன்றைய காலகட்டத்தில் வங்கிகளை விட போஸ்ட் ஆபீஸ் திட்டங்கள் முதலீட்டின் முக்கிய தேர்வாக உள்ளது. வசதி உள்ளவர் முதல் சாமானிய மக்கள் வரை அனைவரும் போஸ்ட் சேமிப்பு திட்டங்களை தேடி வருகின்றனர். அந்த வகையில் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை போஸ்ட் சேமிப்பு திட்டங்கள் பெற்றுள்ளது. மேலும் பெண் குழந்தைகள் எதிர்காலத்திற்காக செல்வ மகள் சேமிப்பு திட்டம், ஆண் குழந்தைகளின் எதிர்காலத்திற்கு பொன் மகன் சேமிப்பு திட்டம் என போஸ்ட் ஆஃபிஸில் அமலில் உள்ளன. போஸ்ட் ஆபீஸில் இருக்கும் மிக முக்கியமான திட்டங்களில் இந்த கிராம சுமங்கல் யோஜனா திட்டமும் ஒன்று.
Exams Daily Mobile App Download
இந்த திட்டம் பணம் தேவை உள்ளவர்களுக்கு மிகச்சிறந்த தேர்வாகும். இந்த திட்டத்தில் ரூ.10 லட்சம் பணத்திற்கு உத்தரவாதம் அளிக்கப்பட்டு திரும்ப வழங்கப்படுகிறது. இது ஒரு எண்டோவ்மெண்ட் பாலிசி ஆகும். இது கிராமப்புறங்களில் வாழும் மக்களுக்கு மிகவும் பயனுள்ள ஒரு திட்டமாகும். இது கிராமப் புறங்களில் வசிக்கும் மக்களுக்குப் பணத்தை திருப்பி தருவதோடு கூடவே காப்பீட்டையும் தருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் இரண்டு வகையான திட்டங்கள் உள்ளன. ஒன்று அஞ்சல் ஆயுள் காப்பீடு, மற்றொன்று கிராமப்புற அஞ்சல் ஆயுள் காப்பீடு (RPLI) திட்டமாகும்.
இதில் 15 ஆண்டு கால திட்டம் மற்றும் 20 ஆண்டு கால திட்டம் என இரண்டு உள்ளன. இந்த திட்டத்திற்கான குறைந்தபட்ச வயது 19 ஆண்டுகள். அதிகபட்சம் 45 வயது ஆகும். 15 ஆண்டு பாலிசியில், 6 ஆண்டுகள், 9 ஆண்டுகள் மற்றும் 12 ஆண்டுகள் முடித்த பிறகு, 20-20 சதவிகிதம் பணம் திரும்ப கிடைக்கிறது. மீதமுள்ள 40 சதவீத பணம் முதிர்வுக்கான போனஸுடன் வழங்கப்படும். அதேபோல், 20 ஆண்டு பாலிசியில், 20-20 சதவீதம் பணம் 8 ஆண்டுகள், 12 ஆண்டுகள் மற்றும் 16 ஆண்டுகள் முடிந்த உடன் கிடைக்கிறது. மீதமுள்ள 40% பணம் முதிர்ச்சி காலத்தில் போனஸுடன் வழங்கப்படும். போனஸ் மட்டுமே 7 லட்சம் ரூபாய் கிடைக்கும்.
இதற்கான பிரீமியம் தொகை நாள் ஒன்றுக்கு ரூ.95 மட்டுமே, 25 வயதான ஒருவர் ரூ.7 லட்சத்திற்கான பாலிஸியை 20 ஆண்டுகளுக்கு எடுத்துக் கொண்டால், அவர் மாதத்திற்கு ரூ2853 பிரீமியம் செலுத்த வேண்டும், அதாவது ஒரு நாளைக்கு சுமார் ரூ.95 மட்டுமே. காலாண்டு பிரீமியம் ரூ.8449 ஆகவும், அரை ஆண்டு பிரீமியம் ரூ.16715 ஆகவும், ஆண்டு பிரீமியம் ரூ.32735 ஆகவும் இருக்கும்.20 ஆண்டு கால பாலிசி காலத்தில் மொத்தம் ரூ. 13.72 லட்சம் லாபம் ஈட்டப்படும். இதில், 4.2 லட்சம் விதிமுறைகளின் படி முன்பே வழங்கப்பட்டுவிடும். மீதமுள்ள ரூ .9.52 லட்சம் முதிர்வு காலத்தில் செலுத்தப்படும். எனவே இந்த திட்டத்தில் தினமும் ரூ. 95 சேமித்தால் போதும் 14 லட்சம் ஈட்டலாம்.