Post Office ரூ.62,000 சம்பளத்தில் சூப்பரான வேலைவாய்ப்பு அறிவிப்பு – விண்ணப்பங்கள் வரவேற்பு!

0
Post Office ரூ.62,000 சம்பளத்தில் சூப்பரான வேலைவாய்ப்பு அறிவிப்பு - விண்ணப்பங்கள் வரவேற்பு!
Post Office ரூ.62,000 சம்பளத்தில் சூப்பரான வேலைவாய்ப்பு அறிவிப்பு - விண்ணப்பங்கள் வரவேற்பு!
Post Office ரூ.62,000 சம்பளத்தில் சூப்பரான வேலைவாய்ப்பு அறிவிப்பு – விண்ணப்பங்கள் வரவேற்பு!

இந்திய அஞ்சல் துறையில் தொடர்ந்து வேலைவாய்ப்பு அறிவிப்புகள் வெளியாகி வருகிறது. அந்த வகையில் தற்போது தமிழ்நாடு வட்டம், மதுரை மண்டலத்தைச் சேர்ந்த திண்டுக்கல், காரைக்குடி, இராமநாதபுரம், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் காலியாக உள்ள கார் டிரைவர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளிவந்துள்ளது. இந்த பணிக்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு அறிவிப்பு:

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருவதால், ஒத்தி வைக்கப்பட்டு இருந்த அரசு மற்றும் அரசு சாரா வேலைவாய்ப்பு அறிவிப்புகள் வெளியாகி வருகிறது. மேலும் வேலைவாய்ப்பு முகாம்களும் நடத்தப்பட்டு வருகிறது. சமீபத்தில் TNPSC குரூப் 2, குரூப் 2A, குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு வெளியானது. இதனை தொடர்ந்து இந்திய அஞ்சல் துறையில் காலியாக இருக்கும் பணியிடங்களை நிரப்ப உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்திய அஞ்சல் துறை ‘இந்தியா போஸ்ட்’ (India Post) என்ற பெயரில் செயல்படுகிறது. இது இந்திய அரசினால் செயல்படுத்தப்படும் அஞ்சல் சேவை ஆகும். இது பல வழிகளில் மக்களுக்குச் சேவை செய்து வருகிறது. நாள் ஒன்றுக்கு இரண்டு இலட்சம் கடிதங்கள் பட்டுவாடா செய்யப்படுகின்றன.

தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை மையம் அறிக்கை!

நாட்டின் எந்த இடத்திலிருந்தும் எந்த இடத்திற்கும் அதிகபட்சமாக நான்கு நாட்களுக்குள் கடிதங்கள் பட்டுவாடா செய்யப்படுகிறது. இந்திய அஞ்சல் துறை மொத்தம் 154,000 அஞ்சல் அலுவலகங்களைக் கொண்ட உலகின் மிகப்பெரிய துறையாகும். இந்திய அஞ்சல் துறையின் தமிழ்நாடு கிளைகளில் பணிபுரிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு அடிப்படையில் கார் ஓட்டுனர் (Staff Car Driver) பணியில் காலியிடங்களின் எண்ணிக்கை 4 (திண்டுக்கல் – 1, காரைக்குடி -1, இராமநாதபுரம் -1, சிவகங்கை- 1) ஆகும். இந்த பணிக்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரர் 10 ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும். மேலும் கார் ஓட்டுவதற்கான லைசென்ஸ் வைத்திருக்க வேண்டும்.

தமிழக கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் பெற்றவர்களுக்கு குட் நியூஸ் – ஆட்சியரின் முக்கிய அறிவிப்பு!

இந்த பதவிக்கு 56 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் இந்த பணிக்கு தகுதியானவர் தேர்ந்தெடுக்கப்பட்டு மாத சம்பளம் ரூ. 18,000 – 62,000 வழங்கப்படும். இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க தங்கள் சுயவிவர குறிப்பு அடங்கிய விண்ணப்பத்துடன் தேவையான ஆவணங்களை இணைத்து The Manager, Mail Motor Service, Tallakulam, Madurai – 625 002 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். இந்த பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 21.05.2022 க்குள் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்கள் அறிய அதிகாரபூர்வ இணையதளத்திற்கு சென்று தெரிந்து கொள்ளலாம்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!