Post Office இல் 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு 2022- முழு விவரங்கள் இதோ!
இந்திய அஞ்சல் துறை, கார் ஓட்டுநர் பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான விண்ணப்பங்களை வெளியிட்டுள்ளது. இந்த பதவிக்கான 29 காலி இடங்களை நிரப்பும் பணி தற்போது தொடர்ந்து நடைபெற்று கொண்டிருக்கிறது.
கார் ஓட்டுநர் வேலை:
இந்திய அஞ்சல் துறை சார்பில் பல வேலைவாய்ப்புகளுக்கான விண்ணப்பங்கள் வெளியாகி கொண்டுதான் இருக்கிறது. தற்போது இந்திய அஞ்சல் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, கார் ஓட்டுநர் பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான விண்ணப்பங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த துறையில் மொத்தமாக 29 காலியிடங்கள் உள்ளன. அதில் பொதுப் பிரிவினருக்கு 15 இடங்களும், ஓபிசி பிரிவினருக்கு 8 இடங்களும், எஸ்சி பிரிவினருக்கு 3 இடங்களும், EWS பிரிவினருக்கு 3 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த கார் ஓட்டுநர் பதவிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும் விண்ணப்பதாரர் கண்டிப்பாக இலகுரக மற்றும் கனரக மோட்டார் வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். இது மட்டுமல்லாமல் குறைந்தது மூன்று ஆண்டுகளாவது கார் ஓட்டுநராக பணியாற்றிருக்க வேண்டும். நேர்முக தேர்வின் மூலமாகவே தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். மேலும் விண்ணப்பதாரரின் வயது 18 முதல் 27 வயதுக்குள் இருக்க வேண்டும்
தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி நிலுவைத்தொகை – கோரிக்கை போராட்டம்!
மேலும் இந்த தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.19,900 லிருந்து ரூ.63,200 வரை சம்பளம் வழங்கப்படவுள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்த துறைக்கு விண்ணப்பிக்க விருப்பப்படும் விண்ணப்பதாரர்கள் இணையதள முகவரியான indiapost.gov.in என்கிற முகவரிக்கு சென்று விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து தேவையான சான்றிதழ்கள் அனைத்தையும் அஞ்சல் மூலமாக அனுப்ப வேண்டும். இது குறித்தான விவரங்கள் எதுவும் அறிய விரும்பினால் www.indiapost.gov.in அல்லது https://www.indiapost.gov.in/